Saturday, 19 August 2017

INFOSYS காமராசர்கள்


INFOSYS காமராசர்கள்





மாற்றம் என்பது மாறாதது
இது,  உலகப் பொது உண்மை

பங்குச் சந்தைக்கு
இந்தப் பேருண்மையே
யானை மீது எறும்பு ஊரும்
உறுத்தாத உராய்வு தான்

பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
Narayana Murthy & Sudha Murthy
இமைக்கும் கணத்தில்
இமயத்தில் கொடியையேற்றும்
அடுத்த நொடியே
பாதாளத்திலும் படுக்கும்
சீற்றமும் சறுக்கலும்
சந்தையில் சாதாரணம்

பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
எதற்காக ஏறும்? இறங்கும்?
யாருக்குத் தான் தெரியும்?

லாப நாட்டப் பேரேடுகளில்
ஒரு  நிறுவனம் முன்னேறும்
சந்தையிலோ அதன் பங்கு
சடசடவெனச் சரியும் 
Nandan Nilekani
லாபம் எதிர்பார்த்த அளவில்லை
நிபுணர்கள் விளக்கம் நல்குவர்

பங்குகளின் விலைகளும்
அந்தச் சந்தையின் நிலைகளும்
யாருக்காக ஏறும்? இறங்கும்?
யாருக்குத் தான் தெரியும்?




ஆதி  நாட்களில்
வள்ளல் அழகப்பரின்
 விரலசைவுகள் தான்
பங்குச் சந்தையின் 
திசைகளைத் தீர்மானித்தன

டாட்டாவும் பிர்லாவும் ஆதிக்கம்
செலுத்தி இருக்கின்றனர்
ரிலையன்ஸ் திருபாய் அம்பானி
சாமானிய   முதலீட்டாளனைச்
சக்கரவர்த்தி ஆக்கினார்


தொழிலில் முதன்மை
எதிலும் நேர்த்தி
எல்லாவற்றிலும் ஒழுங்கு 
அது தான் இன்போசிஸ்

பங்குச் சந்தையின்
முதல் மரபணு அதிரடி தான்
அதற்கு எதிர்நீச்சல் போட்டு
படிப்படியாய் முன்னேறி
பங்குச் சந்தையிலும்
புதிய தடம் பதித்தது இன்போசிஸ்


மாற்றம் என்பது மாறதாதது
இன்போசிசும் விதிவிலக்கல்ல
BOARD ROOM BATTLE எனும்
நிர்வாகத்தின் உட்கட்சிப் பூசல்
புதிய அவதாரம் எடுத்தது
உண்மையில் விநோத அவதாரம்





                    


காட்டை கழனியாக்கிய 
நாராயண மூர்த்தியும்
ஆதி கூட்டாளிகளும்
கார்ப்பரேட் காமராசர்களாகி
தாமே விதைத்து வளர்த்த
இன்போசிஸ் நிறுவனத்தில்
 புதிய தலைமுறைக்கு
வழிவிட வேண்டுமெனும்
இலட்சிய வேட்கையில்
அதிகாரப் பதிவிகளிலிருந்து
விரும்பி விலகினார்கள்,

புதிய தலைமைக்கு
உலகெங்கும் வலைவீசினார்கள்
தம் குடும்ப வாரிசுகளைப்
பட்டியலில் கூடச் சேர்க்கவில்லை
அந்த INFOSYS காமராசர்கள்

CEO Vishal Sikka

                                            

ஆதி கூட்டாளிகளும்
புதிய தலைமைக்கு
இடையே  மனத்தாங்கல் 
புதிய  தலைவரின்
நேற்றைய விலகல்
இடியாய் விழுந்தது
பங்குச் சந்தையில்

இன்போசிஸ் பங்கு விலை
கத்திரி வெயிலில் சுருண்ட
வெற்றிலைக் கொடியென
பத்து சதம் கரைந்தது
சென்செக்ஸ் எனும்
பங்குச் சந்தை தர்மாமீட்டர்
உச்சத்தில் 450 புள்ளிகளையும்
முடிவில் 270 புள்ளிகளையும்
பறிகொடுத்தது பரிதவித்தது


பங்குச் சந்தையின்
நீள அகலங்கள் மேடு பள்ளங்கள்
கவிதை மிகைகளை விஞ்சும்

வெள்ளிப் பணம் இங்கே 
வெள்ளமாய் புழங்கும்
சேர்த்தவர்களோ கொஞ்சம்
நிலையாமைத் தத்துவத்தை
பட்டறிந்த பட்டினத்தார்களோ
ஏராளம் ஏராளம்
              
        நலந்தா செம்புலிங்கம்
                                           19.08.2017





















Saturday, 5 August 2017

Qudsiya : The foot ball fire in her flared up

Qudsiya : The football fire in her flared up



              Qudisya is a Kashmiri girl. Foot ball is her passion.  Just like any other Kashmiri  her dreams of becoming a national player was grounded by ground realities.  Now she is back in field, not as a player, but as a coach. 

               Death of Burwani  turned Kashmir more terrible. The football fire within flared up.  She discovered that foot ball has a solution for kashmir. She left her civil engineering dream to do her bit: apply salve on a distressed people.She then enrolled at the National Institute of Sports (NIS) in Patiala to train herself as a football coach
               Her coaching has augmented more footballers & has dwindled the stone pelters in Kashmir

            And you may presume that she might have been in field for decades. If you think so you are totally wrong, because she herself is just 23. 

             India is young nation with mountains of hope.


               

Sunday, 30 July 2017

அப்துல் கலாமின் சன்மார்க்கம்

அப்துல் கலாமின் சன்மார்க்கம்!

அப்துல் கலாம் அருகில் கீதையா?
அன்று எதிர்த்து நின்றவர்கள்
இன்று பொங்கி எழுகிறார்கள் 



அது இந்துக்களின் திருவிழா
அது இந்துக்களின் திருக்குளம்
அது இந்துக் கடவுளின் சிலை
திருக்குளத்தில் சிலை விழுந்தது

ஒரு இசுலாமியர் தான்
கண்ணிமைக்கும் நேரத்தில்
குளத்தில் பாயந்து 
சிலையை மீட்டினார்
அவர் பேரன் தான்......

வீணை இசைத்த விஞ்ஞானி
கீதை வாசித்த சன்மார்க்கி















கலாமின் சன்மார்க்கம்             
படிப்பறிவினால் மட்டுமல்ல
பரம்பரை வித்தாலும் விளைந்தது

இந்து மடாதிபதி 
இப்தார் விருந்து கொடுப்பதும்
கண்ணனின் தாசன்
இயேசுவைப் பாடியது மட்டுமல்ல

அப்துல் கலாம் பகவத்  கீதை
 வாசித்ததும் தான்
அரசியல் சார்பின்மையற்ற
மதச்சார்பின்மை

நலந்தா செம்புலிங்கம்
                   30.07.2017
மற்ற பதிவுகளையும் பார்க்க என் வலைப்பக்கத்திற்கு வருக :  nalanthaa.blogspot.com

Friday, 28 July 2017

அப்துல் கலாம் : இனிக்கும் பேய்க் கரும்பில் நிலை சேர்ந்த .....

இனிக்கும் பேய்க்கரும்பில் நிலைசேர்ந்த .....

இறை ஞானம் உணர்ந்தவர்
விஞ்ஞானம் வென்றவர்
பள்ளிகளை வலம் வந்து
இனிக்கும் பேய்க் கரும்பில்
நிலை சேர்ந்த திருக்குறள் தூதர்



வாழ்க்கை முறையில் எளியர்
இராணுவ வலிமைக்கு வித்திட்டவர்
எடை குறைவான  ஊன்றுகோல்
மலிவு விலை இதயக் கருவி
இவருக்குப் பிடித்த இவரது சாதனைகள்

சாதி மதம் மொழி கடந்த
புதிய இளைய இந்தியாவை
விதைத்து வளர்த்த
தமிழ் நாட்டுப் பட்டேல்


வரலாறு பல படைத்தவர், இன்று
பூகோளத்தையும் புரட்டிப் போடுகிறார்
இந்தியாவின் மையப் புள்ளி எது?
நாக்பூரா?  இதுவரை எப்படியோ?
இனிமேல் இராமேஸ்வரம் தான்!

மொழி, வழி பேதமின்றி     
ஆறு நூறு என எல்லோரையும்
ஈர்த்த நட்சத்திர நாயகனை
ஈன்ற இராமேஸ்வரம் தான்
இந்தியரின்  மையப் புள்ளி ஆகவே
இந்தியாவின்  மையப் புள்ளி

                                -நலந்தா செம்புலிங்கம்
                                                  28.07.2017
மற்ற பதிவுகளையும் பார்க்க என் வலைப்பக்கத்திற்கு வருக :  nalanthaa.blogspot.com


Saturday, 22 July 2017

பக்தி வெள்ளத்திடம் நாத்திகம் தோற்றுவிட்டது ! !

பக்தி வெள்ளத்திடம்
 நாத்திகம் தோற்றுவிட்டது ! !




ஆடி, 
பதினொன்றோடு  ஒன்று 
பன்னிரெண்டு என்ற 
கணக்கோடு நிற்காது !
அது
சூரியனைச் சுற்றும் 
பூமிப் பந்தின் வழித் தடத்தில்
மாலைப் பொழுதின் ஆரம்பம்
மார்கழி அதிகாலை ஆகும் !

காலையும் மாலையும்
கடவுளைத் தொழுவதற்கு
தேர்ந்த பொழுதுகளாகும் !

புத்தாண்டை ஆவணியில்
கொண்டாடிய ஆடை வணிகர்கள்
அதற்கு முந்தைய ஆடியில்
பழையன கழிக்க தள்ளுபடி
 உத்தியை கைகொண்டார்கள்!

அதனால் தான் ஆடியில்
கோயில்களில் திருவிழா!
கடைவீதியில் கொண்டாட்டம் !

துணிமணிகளில் ஆரம்பம்
தொலைக் காட்சி ஏ,சி
வாஷிங் மிஷின் என எதற்கும்
விலையையே சொல்லமாட்டார்கள் !
தள்ளுபடியைத் தான்
தண்டோரா போடுவார்கள் !

 பாலும் தெளிதேனும்
அன்று அவ்வையார் படைத்தார்
இன்று அவை யாருக்காவது
கலப்படமின்றிக் கிடைக்குமா?

பத்துக்கும் பதினைந்துக்கும்
பால் கிடைத்த போது
சொம்புகளில் தான் அபிக்ஷேகம்
பால் விலை அரை சதமான 
பிறகு தான் அண்டா அண்டவாக 
நடக்கிறது அபிக்ஷேகம்

கட்டுக்கடங்காக் கூட்டம்
தன் மெய் வருந்த பார்ப்போர் 
கண் வருந்த நேர்த்திக் கடன்கள்

பக்தி வெள்ளத்திடம்
நாத்திகம் தோற்றுவிட்டது!
ஆத்திகம் முழு
வெற்றி அடைந்துவிட்டதா?


இன்று ராக்கெட்டுகள் 
விலைவாசியிடம் தோற்கின்றன
அன்றாடத் தேவைப் பொருட்கள்
எட்டாக் கனி ஆகின்றன ஆனாலும்
ஆறு இலக்க பைக்குகள்
சாதாரணமாகிவிட்டன
அரசின் விலையில்லா டி,வி, யும்
அறுபதாயிரம் ரூபாய் டி,வி, யும்
அடுத்தடுத்து இருக்கின்றன சில வீடுகளில்
விலைவாசியும் ஒரு பொருட்டில்லை
முரண்பாடுகளும் சாதாரணமாகிவிட்டன

உ றவுகளுக்குள்ளும் 
முரண்பாடுகள் சாதாரணமாகிவிட்டன
நீ சாட்சியாய் இருந்தது போதும்
நாங்கள் பட்டதும் போதும்
இரங்கி வா இடர்களைய வா

இந்த ஆடியிலாவது தேடி வா
ஊழலை ஒழித்திடு
உறவுகளைச் சேர்தது வை
                        நலந்தா செம்புலிங்கம்
                                    22.07.2017

Saturday, 15 July 2017

பாராமுகமாகக் கீழடி மகுடத்தில் அகமதாபாத்

பாராமுகமாகக் கீழடி! 
மகுடத்தில் அகமதாபாத்!!

AHAMEDABAD













மூத்த தமிழின் சீரிளமை 
2500 ஆண்டு பழைமை தான்
அதற்கு 5000 சான்று பகர்கிறது கீழடி 

கீழடி தமிழர் பெருமிதமா?
சிகப்பு நாடாக்களுக்குள் துயிலும் 
மற்றுமொரு கோப்பு தானா?

வெறும்  அறுநூறு ஆண்டு வரலாறு
து தான்  அகமதாபாதி்ன் துருப்புச் சீட்டு

600 பெரியதா? 2500 சிறியதா?
கீழடி புதிய தலைமுறையா?
அகமதாபாத் பழைய நாகரிகமா?
அந்த குஜராத் தலைநகர் தான்
உலகின் பாரம்பரிய நகராம்
யுநெஸ்‌கோ** மகுடம் சூட்டியுள்ளது



இது இந்தியாவிற்கே மகத்தான மகிழ்ச்சியாம்
இன்புறுகிறார் அந்த மண்ணின் மைந்தர் மோடி
வைகைக் கரையில் தோண்டியெடுத்த சான்றுகள்
மீண்டும் புதையலாக மைசுருக்குப்++  பயணிக்கின்றன

இந்தப் பட்டயம் வெல்லும் போட்டியில்
தில்லியையும்  மும்பையையும் 
அகமதாபாத் நகரம்  முந்திவிட்டதாம்
டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு சிலர்க்கிறது
மனுப் போட்டு பட்டயம் பெற்ற ரகசியம்
யுநெஸ்‌கோ இணைய தளத்திலேய இருக்கிறது

கீழடிக்கு மனுப்போடாதது பரவாயில்லை
மண் அள்ளிப் போடாதீர்கள்
                             
                               நலந்தா செம்புலிங்கம்
                               15.07.2017

** யுநெஸ்‌கோ (UNESCO: The United Nations Educational, Scientific and Cultural Organization)  ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் 

++  மைசூருவில் உள்ள மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கியில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்றன.

Tuesday, 11 July 2017

மீத்தேன் முதலாளிகளும் போராட வேண்டியிருக்கும்

காலம் மாறும , மீத்தேன் முதலாளிகளும்
தெருவில் வந்து போராட வேண்டியிருக்கும்





எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள்

BBC Tamil
about a week ago · 

மத்திய அரசு மாநில அரசு
வாக்குறுதிகளை நம்பித் தான்
மக்களை விரட்டினோம்
ஊரைச் சுடுகாடாக்கினோம்
நீர்நிலைகளை சின்னாபின்னமாக்கினோம்
வயல்களை ஒழித்தோம்    நிலங்களைப்   பிளந்தோம்
 பெட்ரோலுக்குச் சரியான மாற்று மித்தேன் தான்
என  உலகையே நம்ப வைத்தோம்
 நாங்களும் ஏனோ நம்பித் தொலைத்தோம்


கோடியாய் கோடியாய் 
கடன் வாங்கிக்  கொட்டினோம்
எங்கள் கைகளில் கறைபடியாமல்
மீத்தேனை எதிர்த்தவர்களை ஒடுக்கினோம் 

அந்த மதி மயக்கத்தில்
காற்றை மறந்தோம் கதிரவனை மறந்தோம்
மீத்தேனைக் கொள்வாரின்றி 
நடுத்தெருவில் நிற்கிறோம்

                                  ----  நலந்தா செம்புலிங்கம்

Saturday, 8 July 2017

அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்

அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்


போராட்டங்கள் ஓய்வதில்லை
இன்று கதிராமங்கலம்  நாளை ?
24 மணியும் நாளை தான்
24 ஆண்டும் நாளை தான்
அந்த தொலை நாளையில், 



தில்லித் தலை நகரில் 
கொளுத்தும் வெயிலில்
மீத்தேன் முதலாளிகள்
எதிர் நிலைப் போராட்டம்
இன்றே என் கண் முன் விரிகிறது




மத்திய அரசே மாநில அரசே
கொள்முதல் செய் கொள்முதல் செய்
மீத்தேனைக் கொள்முதல் செய்
அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
மின் சக்தியில் ஓட்டாதே
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
சூரிய சக்தியில் ஓட்டாதே
ஓட்டு ஓட்டு அரசு வாகனங்களை
மீத்தேனில் மட்டும் ஓட்டு





மத்திய அரசு மாநில அரசு
வாக்குறுதிகளை நம்பித் தான்
மக்களை விரட்டினோம்
ஊரைச் சுடுகாடாக்கினோம்
நீர்நிலைகளை சின்னாபின்னமாக்கினோம்
வயல்களை ஒழித்தோம்    நிலங்களைப்   பிளந்தோம்
 பெட்ரோலுக்குச் சரியான மாற்று மித்தேன் தான்
என  உலகையே நம்ப வைத்தோம்
 நாங்களும் ஏனோ நம்பித் தொலைத்தோம்

கோடியாய் கோடியாய் 
கடன் வாங்கிக்  கொட்டினோம்
எங்கள் கைகளில் கறைபடியாமல்
மீத்தேனை எதிர்த்தவர்களை ஒடுக்கினோம் 

அந்த மதி மயக்கத்தில்
காற்றை மறந்தோம் கதிரவனை மறந்தோம்
மீத்தேனைக் கொள்வாரின்றி  ***
நடுத்தெருவில் நிற்கிறோம்
                                  ----  நலந்தா செம்புலிங்கம்
                                          08.07.2017
                                          

***  2050 ஆம் ஆண்டில் பெட்ரோலே இருக்காது என்று அச்சுறுத்துகிறது ஒரு கணிப்பு.  உலகமே மாற்று எரிபொருட்களுக்கு மாறிவிடும் ஆகவே 2050 ஆம் ஆண்டில் பெட்ரோலுக்குத் தேவையே இருக்காது என்று நம்பிக்கையூட்டு இன்னொரு கணிப்பு

Sunday, 2 July 2017

சாலை விபத்துக்கள் சாதாரணம் ! விபத்துச் சாலைகள் ஏராளம் !!

                 இன்று வாகனம் ஒரு அத்தியாவசியம் 
                அதன் விலை   பெருமித அடையாளம்
                அதன் வேகம்   போதை ஊட்டும் பெருமிதம்

                                                                                                
                                                                                                 வேகத்திற்குத் தீனி போட
     அரசும் வழுக்குச் சாலைகளை
     நாடெங்கும் போடுகிறது
     அதற்கான நிறுவனம் NHAI
     அரசுத் துறை, நிறுவனமாகும் போது 
     ஊழலும் ஊதாரித்தனமும் 
     மற்ற கார்ப்பரேட் கலாச்சாரங்களும் 
       அதன்  ரத்தமும் சதையும் ஆகின்றன









இன்று   பெயர் பலகைகள் வழிகாட்டிகளுக்கே
தனியார்  ஸ்பான்ஸர்ஷிப் தேவைப்படும்போது
பல்லாயிரம்  கிலோ மீட்டர் சாலைகளை 
 NHAI நிறுவனமா போடும்? தனியாரிடம் ஒப்படைக்கும்

 
அவர்கள் சாலைகள் போடமாட்டார்கள்
ரப்பர் டயர்களுக்கு தாரினால் மெத்தை விரிப்பார்கள்
நகருக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
50 அடிசெங்குத்து  மேம்பாலம் கட்டுவார்கள்
பாலத்தைத் தவிர மற்றதெல்லாம் சிதையுறும்

ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 
பல கிலோ மீட்டர் ஆற்று மணல், செம்மண் 
 உவர்மண் என வகைவகையாய்வாரி இறைப்பார்கள் 
எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றுக்கு நாலாய்
மக்கள் தலையில் கட்டுவார்கள்

கார்பேரட்கள் கல்லாப் பெட்டியில் கண்ணாகயிருக்கும்
சாலைகள் அரசின் சாதனைகளாகப் பறைசாற்றப்படும்
இது விமான ஓடுதளமா? வெளிநாட்டுச் சாலையா?
விபத்துக்களை விலை கொடுத்து வாங்கும்
வாகனசாரிகள் புளகாங்கிதம் அடைவர்

NHAI நிறுவனம் அவ்வப்போது 
கட்டணங்களை உயர்த்தும்  அது
உடனுக்குடன் அன்று நள்ளிரவே
அமலுக்கு வந்து விடும்.  ஆனால் 
NHAI இணைய தளமோ 2005 திட்டத்தை **
நிகழாண்டு திட்டம் என்று சாற்றும்
சுங்கக் கட்டணங்களுக்கென தனி இணையதளம்
அது நாமக்கல் கரூர் திருச்சி நெடுஞ்சாலை **
மேற்கு வங்கத்தில் உள்ளதாய்ப் பகரும்

நாம் விரும்பித் தான்  கப்பம் கட்டுகிறோம்
கார்ப்பரேட் சாலை முதலாளிகள் 
கார் கம்பெனிகள்  கொழிக்கின்றன.
விபத்துக்களும் உயிர்பலிகளும் 
அவர்கள் திட்ட வரைவுகளில் இல்லை, நாமோ
எமனை வம்புக்கு இழுக்காமல் இருப்பதில்லை  
பளபளப்பான கார்கள் பறக்கும் சக்கரங்கள்
இடதிலும் வலதிலும் மட்டுமல்ல இடக்காவும்
 முன் செல்லும் வாகனத்தை முந்தலாம்
மிகைவேகம் ஒரு போதும் தண்டிக்கப்படாது 
ஏனெனில் நீங்கள் அந்தச் சாலை முதலாளியின்
முக்கியமான வாடிக்கையாளர்
வேகத்திற்கு சேவகம் செய்வது தான்
இவர்கள் பிறப்பின் நோக்கம்





சாலை விதிகள் ஓரம்கட்டப்படுகின்றன
காலனுக்கு ஓவா் டைம் வேலை கட்டாயமாகிவிடுகிறது.
சாலை விபத்துக்கள் சாதாரணமாகிவிட்டன
விபத்துச் சாலைகள் ஏராளமாகிவிட்டன

                    நலந்தா செம்புலிங்கம்
                                                 02.07.2017