Thursday 26 July 2018

காரைக்குடியின் கனவுப் பள்ளியில் நல் எண்ண இதயர் முத்து

         சுழற் கழகம் உலகளாவிய தொண்டு நிறுவனம் தான்.  ஆனால் 24.07.2018 வரை நான்  அவ்வமைப்பைப் பற்றி நான் மூன்று தகவல்களைத் தான் அறிந்திருந்தேன்.

        இதயம் நல்லெண்ணெய் பற்றியும்   மூன்று தகவல்களைத் தான் அறிந்திருந்தேன்.

           காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி பற்றி புத்தகம் எழுதக் கூடிய அளவு தகவல்கள் அறிவேன்.

             மேற்சொன்ன  மூன்று குறிப்புகளுக்கும் என்ன முடிச்சு? எனக் கேட்பீரகள்.  நீங்கள் கேட்காவிட்டாலும் என்னால் சொல்லாமல் இருக்கமுடியாது.

              இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் அதிபர் திரு    முத்து காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு 24.07.2018 அன்று வருகை தந்தார்.  அந்த வருகைக்குக் காரணம் சுழற் கழகம்.  

           
                இதயம் நல்லெண்ணெய்  நிறுவனம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும்  வெற்றிகரமான பாரம்பரிய நிறுவனம்.  2.   பாரம்பரியப் பண்புகளிலிருந்து விலகாமல்  நவீன தொழில் மேலாண்மை முறைகளை கையாளும் நிறுவனம்.  3 அந்நிறுவனத்தில் மூலப் பொருளான எள்ளின் விலை கடுமையாக உயர்ந்த போதும் அந்த விலை உயர்வால் பாதிப்பு ஏற்பட்ட போதும் கூட ரீபைண்டு எண்ணெய் வணிகத்தை பற்றி சிந்திக்காத நல் எண்ண நிறுவனம். 

இதயம் நிறுவன அதிபர் வி. ஆர். முத்து
சுழற் கழகம் காரைக்குடிக்கும் வேண்டுமென  67 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாமனிதர் நினைத்திருக்கிறார்.  அவரே காரைக்குடியில் சுழற் கழகத்தைக் காரைக்குடியில் தோற்றுவித்தார், அவர் தான் வள்ளல் அழகப்பர்.  இந்த ஒரு தகவலே உலகளாவிய சுழற் கழகத்தின் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.  சுழற் கழகம்  போலியோ  ஒழிப்பற்கு முன்னுரிமை கொடுத்து களப் பணியாற்றுவது அதன் நன்மதிப்பை மேலும் கூட்டியது.  இந்தக் கழகத்தின் மாணவர் அமைப்பான இண்ட்ராக்ட் சங்கம் பல பள்ளிகளில் இயங்கிய வருகிறது.

               இராமநாதன் செட்டியார் பள்ளியில் இயங்கி வரும் இண்ட்ராகட் கழகத்தின் இரண்டாம் ஆண்டு பொறுப்பாளர்கள் பதிவியேற்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கத் தான் இதயம் நிறுவன அதிபர் திரு    முத்து அவர்கள் இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு வருகை தந்தார்.

                  நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு கம்பன் கழகத்தைப் போல குறித்த நேரத்தில் தொடங்கியது.  இதற்குப் பெரிது காரணம் உரிய நேரத்திறகு சற்று முன்னரே வந்து சேர்ந்த சிறப்பு விருந்தினர் இதயம்      முத்து அவர்களும் அவருடன் விருதுநகர் நண்பர்களும் தான்.

                  பள்ளி நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடத்துவது, பெரிய சுமையோடு ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது.  பக்குவமாக ஓட்ட வேண்டும்.  நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களின் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற வேண்டும்.  நிகழ்வை உரிய நேரத்தில் நிறைவு செய்து மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவையெல்லாம் இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு பழகிய பாதை தான்.

                சிறப்பு விருந்தினர் இதயம் முத்து தான் புதிய பாதையில் பயணித்தார்.  தம் ஒரு பள்ளியை கடந்த நான்காண்டுகளாக நடத்தி வருதாகவும் அதில் நானூறு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள் என்றும் உங்கள் பள்ளியில் ஐந்து ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 218 யிலிருந்து 1200 ஆக உயர்ந்திருப்பது பெரிய சாதனை எனப் பாராட்டினார்.   இந்தப் பாராட்டு வெற்றுப் புகழ்ச்சியல்ல என்பதை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்க அவர் தம் பள்ளியையே ஒப்பிட்டு கூறியது அவருடைய நல்லெண்ணத்திற்கு இன்னொரு சான்றாகும்.

  புதிய நிர்வாகிகளை அருமையாக வாழ்த்திய கையோடு பள்ளி ஆசரியர்களை அழைத்து மாணவர்களின் முன்னிறுத்தி அவர்களைப் பாராட்டி மாணவர்களையும் வாழ்த்தச் சொன்னார். அவர் அத்தோடு நின்றிருக்கலாம் நாங்கள் வந்த காரில் ஒரு சீட் இருக்கிறது உங்கள் தலைமை ஆசரியரை எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லவா? எனக் கேட்டு மாணவர்களைக் கலக்கிவிட்டார். பிறகு உங்கள் சம்மதம் இன்றி உங்கள் தலைமை ஆசிரியரை அழைத்துச் செல்லமாட்டேன் என்று சொல்லித் தான் மாணவர்களை சமாதனப்படுத்தினார்.
               எதிர்பாராத திடீர் விருந்தினர்களை உபசரிப்பதைப் போல இது போன்ற நிகழ்வுகளில் சில திடீர் வாழ்த்துரைகள் திடீர் பொன்னாடை மரியாதைகள் நேர நிர்வாகத்திற்குச் சவால் விடும்.

ஜெப்ரி
               அமெரிக்காவில் குடியேறி பணியாற்றும் காளையார்கோவில் குடும்பத்தைச் சேர்ந்த ஜெப்ரி, அமெரிக்காவிலேயே பிறந்து அங்கேயே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்.  கோடைவிடுமுைறக்காக காளையார்கோவிலுக்கு வந்த ஜெப்ரி, இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு  தமிழ் கற்பதற்காக கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறார். தமிழ் ஆர்வமிக்க அந்த பயிற்சி மாணவரையும் இந்நிகழ்ச்சியில் திடீரென வாழ்த்துரை வழங்கச் சொன்னார்கள்.

            . பொன்னாடை மரியாதைகளும் ஒன்றிரண்டு அதிகமானது. இவற்றோடு திட்டமிட்ட பதவியேற்பு வாழ்த்துரை போன்ற நிகழ்வுகளும் ஏராளமாக இருந்தன. இவ்வளவு உள் நிகழ்ச்சிகளையும் சீராக கடிகார நேர்த்தியோடும் பொறுத்தமான இணைப்புரைகளோடும் அழகாக ஒருங்கிணத்தார் ஆசிரியை மீனாட்சி. 

ஆசிரியை மீனாட்சி
                         இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள் சிலரே இது போன்ற இண்ட்ராக்ட் அமைப்புகள் பெரும்பாலானவை பதவியேற்பு விழாவிற்கு மேல் செயல்படுவதில்லை என்றும் இராமநாதன் செட்டியார் பள்ளியின் இண்ட்ராக்ட் சங்கம் கடந்த ஆண்டில் பல பணிகளை செய்துள்ளது என்று பாராட்டினார்கள்.  இந்த விழாவும் வெற்றுச் சடங்காக இல்லாமல் விழாவில் கலந்து கொண்ட அனைவருடைய ஈடுபாட்டையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.  அதற்கு இன்னொரு சான்றும் சிறப்பு விருந்தினரிடமிருந்து கிடைத்தது.
                        

                       சிறப்பு விருந்தினர் விடைபெறும் நேரத்தில் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா என்னை  அறிமுகப்படுத்தினார்.  அவருடைய மிகமொழியை மறுத்துவிட்டு  நான் இந்த பள்ளியின் ரசிகன் என்றேன்.  அதற்கு இதயம் அதிபர் வி. ஆர் முத்து இன்று நிறைய ரசிகர்கள் சேர்ந்துள்ளோம் என்றார்.  காரைக்குடியின் கனவுப் பள்ளியாகவும் ஊடகங்களின் செல்லப் பள்ளியாகவும் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி இனி சுழற் கழகத்தின் மூலம் உலகின் கவனத்தைப் பெறும்.

நலந்தா செம்புலிங்கம்
nalanthaa@gmail.com




Monday 9 July 2018

காமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்!







காமராசர் மனம்
குளிரும் நாள்
விரைவில் மலரும்!



           1. பதவி 2. பணி 3. பொறுப்பு

          இந்த சொற்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை தாம். எனினும்  
மூன்று சொற்களில் முதல் சொல்லிற்கு ஆசைப்படாதவர்களைக்
காண்பது அரிது.  இரண்டாவது சொல்லை முழுமையாக ஆற்று
பவர்களைக் காண்பது மிக அரிது. மூன்றாவது சொல்லின்
பொருளுணர்ந்து கடமையாற்றுபவர்களைக் காண்பது மிக மிக
அரிது.
      
         அரிதிலும் அரிதாக  தகுதியால் ஒருவர் அடைந்த பதவியில்
முழுமையாகப் பணியாற்றிவதோடு பொறுப்போடு கடமை
யாற்றினால் என்னவெல்லாமே நடக்கும். சாதனைகள் எல்லாம்
சாதாரணமாகும்!
      
ஒரு மாவட்டக் கல்வி அலுவலரின் முக்கிய பணிகள் தமது
மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்
செயல்பாடுகளை ஆய்வு செய்வது, அரசு உதவி பெறும் பள்ளி
களுக்கான சம்பள அலுவலராகப் பணியாற்றுவது, மாணவர்
களுக்கான அரசின் நல உதவித் திட்டங்களைச் செயல்படுத்து
வதுமாகும்.  
              
               தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அ. மாரிமுத்து இந்தப்
பணிகளுக்கு அப்பாலும் பொறுப்போடு பணியாற்றி முத்திரை
பதித்துள்ளார். அந்தப் பொறுப்பு என்பது கூடுதலான அக்கறை தான்.  
கூடுதலான அக்கறை என்பது தமது நிர்வாகத்திற்குட்பட்ட
பள்ளிகளை நினைந்தூட்டும் தாயைப் போலப் பேணிக் காப்பது தான்.
                         
தேவகோட்டை கல்வி மாவட்டம் உள்ளிட்ட சிவகங்கை
வருவாய் மாவட்டம்  2017 - 18 ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில்
சிவகங்கைமாவட்டம் 98.5 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதல் மாவட்டம்
எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

             பத்தாயிரம் பணியிடங்களுக்கு  நடைபெறும் போட்டித்
தேர்வுகளில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதும் காலத்தில   தமிழகத்தில்
இருக்கும் 32 மாவட்ம் இதில் முதல் மாவட்டம் என்பது பெரிய
சாதனையா? என சிலர் கேட்கலாம்.

               அந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களைவிடவும்
இந்தக் கல்வித் தேர்வில் சிவகங்கை கல்வி மாவட்டம் பெற்ற வெற்றி
பெரிய சாதனை தான்.  இதை மற்ற மாவட்டங்கள் ஒப்புக் கொள்ளும்,
ஏனென்றால் அந்த முதலிடத்தை ஒரே மாவட்டமே தொடர்ந்து 27
ஆண்டுகள் வென்றுவந்தது. அதனால் அந்த முதலிடம் மற்ற 31
மாவட்டங்களின் கனவு எல்லைக்கு அப்பாலேயே இருந்து வந்தது.

            சிவகங்கை மாவட்டம் இந்த சாதனை நிகழ்த்திய போது இந்த
வருவாய் மாவட்டத்திற்கு உட்பட தேவகோட்டை கல்வி மாவட்டத்தின்
மாவட்ட கல்வி அலுவலராகத் திகழும் அ. மாரிமுத்துவின் முந்தைய
சாதனைகளும் ஈடுபாடும் அந்த சாதனையை விட வியப்பாக
இருக்கிறது.

             புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்திலுள்ள அரசுப் பள்ளியில்
சுமார் 7 ஆண்டு காலம் இவர் ஆசரியராகப் பணியாற்றிய போது
மாணவர் எண்ணிக்கை 600 யிலிருந்து 1200 ஆக உயர்ந்துள்ளது.

                பின்னர் இவர் புதுக்கோட்டை மாவட்டம் சூரியரில் சுமார்
இரண்டாண்டுகள் பணியாற்றிய போது மாணவர் எண்ணிக்கை 200
யிலிருந்து 400 ஆக உயர்ந்ததோடு உயர்நிலைப் பள்ளியாக இருந்த
அப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயரவும் பாடுபட்டுள்ளார்.

               புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதியில் இவருடைய
தலைமை ஆசிரியப் பணி ஒரு காப்பியப் பணியாகவே திகழ்ந்
திருக்கிறது.  பொதுத் தேர்வு சற்று முந்திய பிப்ரவரி மார்ச்சு
மாதங்களில் மாணவர்கள் இரவு நேரம் படிப்பதற்கும் ஏற்பாடு
செய்ததோடு, இவர் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்து
பவர்களைப் போல காவி வேட்டி உடுத்தி மாணவர்களின் வெற்றிக்காக
நோன்பிருந்திருக்கிறார்.  மற்றொரு புறம் மாணவர்களுக்கு
சிலம்பம் காரேத்தே பயிற்சி அளித்திற்கிறார். சாரணர்
ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்ந்து அப்பள்ளி மாணவர்களின்
கல்விக்கு அப்பாற்பட்டபன் முக ஆற்றல்களை வளர்க்க
உறுதுணையாக நின்றிருக்கிறார்.

              அதே நேரம் இவரது ஈடுபாடுமிக்க பணி அந்தப் பள்ளியோடு
நின்றுவிட வில்லை, கூடுதலாக மூன்று பொறுப்புகளையும் ஏற்றுப்
பணியாற்றி
யுள்ளார்.  
                  
முன்னுதாரணமான கல்வியாளரான  திரு அ மாரிமுத்து புதுக்
கோட்டை மாவட்டம் மணவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில்
தலைமையாசிரியராகப் பணியாற்றிய 2009 முதல் 2016 வரையிலான
காலத்தில் புதுக்கோட்டை நகர் காமராசரபுரம் அரசு மேல்நிலைப்
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசரியராகவும் புதுக்கோட்டை
மாவட்டத்தின் இரண்டு கல்வி அலுவலர்களுக்கு நேர் முக உதவி
யாளராகவும் பணியாற்றியுள்ளார்.  ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே
நேரத்தில் நான்கு பணிகளை ஆற்றியுள்ளார்.
                
 இதுவரை இவர் வகித்த பதவிகளைப் பார்த்தோம்.  அவற்றில்
இவர் வரையறுத்த பணிக்கு அப்பாற்பட்டு மாணவர் நலன்கருதி
பாடுபட்டதையும் பார்த்தோம்.  ஒரே நேரத்தில் நான்கு பணிகளை
ஏற்றதையும் பார்த்தோம்.

               நினைந்தூட்டும் தாயென இவர் ஒரு அரசுப் பள்ளியை பேணிக்
காத்தும் வரலாறு படைத்துள்ளார்.  அந்நிகழ்வைக் கேள்விப்பட்ட போது
இவர் ஒரு அரசு அலுவலர் தானா? காந்தி காலத்து சுதந்திரப் போராட்ட
வீரரா? என்ற ஐயமே எழுந்தது.

               ஒரு அரசு அலுவலரே (கல்வித் துறை சாராத அரசு அலுவலர்) ஒரு
முன்னுதாரணமான அரசுப் பள்ளிக்கு பல இடையூறுகளை அளித்து
வந்தார்.மாவட்டக் கல்வி அலுவலரான திரு அ.  மாரிமுத்து இடையூறு
அளித்து வந்த அந்த அரசு அலுவலரை நேருக்கு நேர் “இது என் பள்ளி,
என் அனுமதி இல்லாமல் எப்படி நுழைந்தீர்கள்? என்று கண்டித்தார்.

               காலில் முள் குத்தினால் கண்ணில் நீர் சுரக்க வேண்டும், அப்படி
சுரந்தால் தான் கண்ணும் காலும் ஒரு உயிரின் அங்கமாகும்.  அடிக்
கோடிட்டுச் சொல்கிறேன் ஒரு உடலின் அங்கமல்ல, உயிரின் அங்கமாகும்.
               பெரும்பாலான அரசு நிறுவனங்கள் உயர்அதிகாரிகளின் கண்டும்
காணாத போக்கினாலோ சுயநல போக்கினாலோ தான் சீரழிகின்றன.  




               உயர் அதிகாரிகளின் பொறுப்பின்மையும் அக்கறையின்மையும்
அரசு இயந்திரத்தின் உள்ளிருந்து அரித்துக் குடையும் புற்று நோயாகும்.  
அந்நோயை வேரறுக்கும் வீரராகத் திகழும் தேவகோட்டை மாவட்ட கல்வி
அலுவலர் அ, மாரிமுத்து தேனி மாவட்டத்தின் முதன்மைக் கல்வி
அலுவலராக பணி உயர்வு பெறும் இந்நாள் (09.07.2018)  கல்வித் துறைக்கு
மட்டுமல்ல சமூத்திற்கே நன்னாளாகும். ஆனால் இன்னும் நூறு
மாரிமுத்துக்களாவது உருவானால் தான் மக்கள் கல்வி முழு
வெற்றியடையும்.  அன்று தான் காமராசர் மனம் குளிர்வார்.
காமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரட்டும்.

நலந்தா செம்புலிங்கம்
09.07.2018