Wednesday 25 April 2018

ஒத்தக்ககடையில் வெற்றிப் புன்னகை!!



ஒத்தக்ககடையில் வெற்றிப் புன்னகை!!

        புகைப்படக் கலைஞர்களின் சொற்களுக்கு அப்படியொரு மந்திர சக்தி இருக்கிறது.  நீங்களும் அந்த மந்திர சக்திக்கு ஆட்பட்டிருப்பீர்கள்ஆனால் அதை உணர்ந்திருக்கமாட்டீர்கள்.

          “ கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க, "லெப்ட் சைடு திரும்புங்க",  "என்னைப் பாருங்க   என அடுத்தடுத்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர் சொல்லச் சொல்ல புகைப்படம் எடுத்துக் கொள்ள நிற்பவரின் முகம் மெல்ல மெல்ல இருகும். 

          









         






இதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வரும்.  “அப்படியே பாருங்க, என்னைப் பாருங்க ....ஸ்டடி....அப்படியே கேமராவைப் பாருங்க என்று அவர் சொல்லும் கணத்திலேயே இவரின் முகம் காற்றைப் பரிகொடுத்த பலூனைப் போல வதங்கிப் போய்விடும்.

          இந்தப் புகைப்படக் கலைஞர்களிடமிருந்து எப்படித் தப்புவது? ஒழுங்காக "போஸ்" கொடுக்கச் சொல்லிக் கொடுக்க ஆளே இல்லையா?  என தருமி மன்றாடியதைப் போல நானும் அந்தச் சொக்கநாதரிடமே மன்றாடினேன். சொக்கநாதர் கருணை கொண்டு என் கனவில் வந்து காட்சியளித்தார்.  மதுரை ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு செல்க எனக் கட்டளையிட்டார்.

         பொழுது புலர்ந்ததும்  மதுரை ஒத்தக்கடைக்கு விரைந்தேன். அங்கு கோடை விடுமுறைக் கால பயிற்சி வகுப்பு ஏதேனும் நடக்கும் போலும் அதனால் தான் சொக்கநாதர் நம்மை அனுப்பியிருக்கிறார் என நினைத்துக் கொண்டு பள்ளியினுள் நுழைந்தேன்.
           
           அங்கு ஒரு பயிற்சி வகுப்பும் நடக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியிலிருந்து விடைபெறும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா தான் நடந்து கொண்டிருந்தது. அடடா இதற்குத் தானா தனியார் பேருந்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு விரைந்து வந்தோம் எனப் புலம்பினேன். அதுவும் சொக்கநாதர் காதில் விழுந்துவிட்டது, என் முன் தோன்றினார்கோபமாகவே இருந்தார்.  நல்லவேளை நெற்றிக்கண்ணைத் திறக்கவில்லை.  இதுவரைக்கும் தருமி கதை போல ஒடிக்கொண்டிருந்தது. திடீரென தடம் மாறிவிட்டது. சொக்கநாதர் கேள்வி கேட்க நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

                சொக்கநாதர்:   பிரிவு உபசார விழாவில் என்னவெல்லாம் நடக்கும்?

               நான்: விருந்து கொடுப்பார்கள்

                சொக்கநாதர்: சாப்பாட்டில் தான்  கவனம் போலும் சரிவேறென்ன நடக்கும்

                  நான்: பொன்னாடை போர்த்துவார்கள் 

                சொக்கநாதர்: அதற்குப் பிறகு ?

                    நான்: பரிசுகள் வழங்குவார்கள்

                    சொக்கநாதர், எதிர்பார்த்த  பதிலைத் தவிர வேறு எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமை இழந்த சொக்கநாதர்: 

                      குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவார்களா மாட்டார்களாஎன அதட்டினார்

                      நான்: ஆம் நிச்சியமாக எடுத்துக் கொள்வார்கள்.

                        சொக்கநாதர்: குழுப் புகைப்படத்தை  எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

                       நான்: மாணவர்கள் இரண்டு மூன்று வரிசை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள்,  அதற்கு பின் வரிசையில் மாணவர்கள் நிற்பார்கள்  அல்லது முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள்.

                         சொக்கநாதர்: ஆசிரியர் தலைமை ஆசிரியர் எங்கே  இருப்பார்கள்?

                        நான்:  முதல் வரிசை நடுவில் பெரிய நாற்காலியில் விரைப்பாக  உட்கார்ந்திருப்பார்கள்

                         சொக்கநாதர்: முக்கியமான இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை கூறியதால் நீ விரும்பிய புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் தேர்ச்சி பெற மிகச் சிறந்த குருநாதரைக் காட்டி வைக்கிறேன்.  

                    சொக்கநாதர்: இந்தப் பள்ளி நடு முற்றத்தில் 16 மரங்கள் உள்ளன வது மரத்தின் பின் நின்று கொள் அந்த வகுப்பறைக்குள் உன் குருநாதர்  புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் லயிப்பதைப் பார்,  ஏகலைவனைப் போலவே நீ தொலைவிலிருந்தே கற்றுக் கொள்வாய்.  உன் குருநாதர் துரோணாச்சாரியரைப் போல கட்டை விரல் காணிக்கையெல்லாம் கேட்கமாட்டார்.

                     நான்:  அது சரி  சொக்கநாத என் குருநாதர் யார்?

                       சொக்கநாதர்: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய (ஒத்தக்கடை) தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் தான் உன் குருநாதர்.

****/////****/////*****

                         குழுப் புகைப் படத்திற்கு மாணவர்கள் தலைமை ஆசிரியர் சில ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர் எல்லோரும் தயராகிவிட்டனர். 

                      எல்லா மாணவர்கள் முகத்திலும் சாதனைப் புன்னகை ஏறத்தாழ எல்லோர் கையிலும் ஒரு ஓவிய அட்டை.  தங்கள் முகத்தை விட அந்த ஓவிய அட்டை நன்றாகத் தெரியவேண்டுமென தலைக்குமேல் பிடித்துக் கொண்டார்கள்

                       நாற்காலிகளையே காணவில்லை நீள பெஞ்களையும் காணவில்லை. தலைமை ஆசிரியருக்கு மட்டுமல்ல சிறப்பு விருந்தினருக்குக் கூட நாற்காலி இல்லை.  

                             
  .              ஏதோ கூட்டாஞ்சோறு உண்பதற்கு உட்காருவதைப் போல கிட்டத்திட்ட அரை வட்டமாக அதுவும் பல் வரிசை போல சில  இடங்களில் ஒற்றை வரிசையிலும்  சில இடங்களில் இரட்டை வரிசையிலும் 10,11 மாணவர்கள் உட்கார்ந்தார்கள்.  அதற்குப் பின்னால் முட்டிக் கால் போட்டு ஒரு அரை வட்ட வரிசை. அதற்குப் பின்னர் நி்ன்று கொண்டு ஒரு வரிசை.  ஒரு ஆசிரியர் அந்த நிற்கும் வரிசையிலும் இன்னொரு ஆசிரியர் 


.
                   
















மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
உட்கார்ந்திருந்த வரிசையிலும் மாணவர்களோடு கலந்திருந்தனர். சிறப்பு விருந்தினரும் தலைமை ஆசிரியரும் முதல் வரிசையில் சம்மணமிட்டு மாணவர்களோடு கலந்திருந்தனர்.  மாணவர்களோடு மாணவராக தலைமை ஆசிரியர் கலந்து இருக்கும் போது அவர் தனித்துத் தெரிவதற்கு பெரிதும் காரணம் அவரது கட்டம் போட்ட சட்டையாதூய வெண்பற்களான்தைக்  கண்டுபிடிப்பது எளிதல்ல

                   பொதுவாக இதைப் போன்ற படங்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் கவனத்தை ஈர்க்கும் . பள்ளி மாணவர்களாகப் படத்தில் காட்சியளிப்பவர்கள் சமூகம் கொண்டாடும் மருத்துவராக உயரதிகாரியாக கலைஞராக பரிணமித்திருப்பார்கள்.  இவ்வளவு பெரிய ஆளுமைகள் சிறுவயதில் இப்படி இருந்தார்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் போது ஒரு புளகாங்கிதம் ஏற்படும்.

               ஆனால் ஒத்தக்கடைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபசார விழாப் படம் எடுத்த நாளிலேயே மிளர்கிறது. அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் முகத்தில் பூத்திருப்பது இயல்பான புன்னகை! இருக்கம் இல்லாத புன்னகை! கற்றலில் இனிமையை பறைசாற்றும் வெற்றிப் புன்னகை!!

நலந்தா செம்புலிங்கம்
25.04.2018




Monday 23 April 2018

அழகப்பர் திருவாசகம்

அழகப்பர் திருவாசகம் 
  
//// **** ///// **** /////

புத்தகங்களால்
அறிவு பெருக்கெடுக்கும்!
அன்பு பெருக்கெடுக்கமா?
இரவல் கொடுத்தவன்
புத்தகத்தைத் திருப்பிக் கேட்கிறானே?
அன்பு எப்படிப் பெருக்கெடுக்கும்?



///
ஒரு இரவல் புத்தகம் தான்
எங்கள் நட்புறவின் கோபுரத்தில்
கலசமாகத் திகழ்கிறது !

///
அது ஈடு இணையற்ற புத்தகம்!
ஒரு பள்ளி வெளியிட்ட புத்தகம்!
சந்தையில் கிடைக்காத புத்தகம்!
ஒரு நண்பரிடம் இருந்தது
இரவல் கேட்டேன், உடனே தந்தார்!

///
சொன்னால் நம்பமாட்டீர்கள்
திருப்பிக் கொடுத்தும் விட்டேன்
கொடுக்கும் போது நன்றியுரைத்தேன்
இது புத்தகமல்ல, திருவாசகம்!
அழகப்பர் எழுதிய திருவாசகம்!!

///
இரவல் கேட்டு பெற்று
படித்து திருப்பிய புத்தகம்
என்னிடமே திரும்பியது
இப்போது பரிசாய்!
இருபதாண்டு நட்பின் பரிசாய்!!
அழகப்பரிடம் நான்
திளைத்ததற்கு அங்கீகாரமாய்!!

///
எனது புத்தகத் தேன் கூட்டில்
இன்றைக்கு மட்டுமல்ல  என்றைக்கும்
இதுவே மதிப்புமிக்க நூல்!

///
அந்தப் புத்தகத்திற்கு 
விலை இல்லை!
ரவிச் சந்திரனின்**
அன்பிற்கும் எல்லையில்லை !!
                    
                                 நலந்தா செம்புலிங்கம்
                                 உலகப் புத்தக நாள் 2018
பின் குறிப்பு

*** நண்பர் ரவிச்சந்திரன் புத்தகப் பித்தர், சிறந்த கவிஞர்.  "கவியரசன் காவியம்" என புதுக் கவிதையில் கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். இவர் காரைக்குடி SMS பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.

Thursday 19 April 2018

சிலம்பைத் தூக்கிப் பிடிக்கும் குன்றக்குடி அடிகளார் !!

சிலம்பைத் தூக்கிப் பிடிக்கும்
 குன்றக்குடி அடிகளார் !!    
                                              /// *** /// *** ////
தேவகோட்டை தமிழ் மையத்தை சித்திரை முதல் நாளில் (14.04.2018) தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார். உள்ளபடியே அவர் தொடங்கி வைப்பதற்கு முன்னரே தமிழ் மையம் ஆசிரியர்களுக்கான கட்டுரை கவிதை பேச்சுப் போட்டிகளை நடத்தி அதன் பணியைத் தொடங்கிவிட்டது. தொடக்க விழா ஒரு பள்ளி ஆண்டுவிழா போல பரிசளிப்போடு நடைபெற்றது. இரண்டு பள்ளிகள் கலை நிகழ்ச்சிகள் வழங்கியதால் இரண்டு பள்ளிகளின் ஆண்டு விழா என்றே சொல்லலாம்.



நகரத்தார் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கோதை ஆண்டாள் வரலாற்றை 10 நிமிட நாடகத்தில் கண் முன் நிறுத்தினார்கள். இந்தப் பத்து நிமிடத்திற்குள் மழலைக் கோதை இளமங்கைக் கோதை என இரு பருவங்களையும் இரு வெவ்வேறு மாணவர்களை நடிக்க வைத்து வேறுபடுத்திக் காட்டினார்கள். கோதைத் தமிழில் சிறப்பு ழ கரம் மிகுந்திருக்கும் அதை மிகச் சரியாக உச்சரித்து அசத்தினார்கள்.
லோட்டஸ் பள்ளி மாணவர்கள் ஒரு 15 நிமிட நாடகத்திற்குள் சிலப்பதிகார நாடகத்தை அனல் பரக்கும் வசனங்களோடு படைத்தார்கள். கண்ணகி நடித்த மாணவிக்கு நெடிய நெடிய வசனங்கள் அவற்றை மெய்ப்பப்பாட்டோடு பேசி நடித்து முழு அரங்கத்தை தன்வயப்பப்படுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அது அவருடைய சிறப்புரையிலும் வெளிப்பட்டது.

தேவகோட்டை தமிழ் மையத் தொடக்க விழாவில் குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. அடிகளார் பல உரைகளைக் கேட்டவர்களுக்கும் இந்த உரை என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது. கருத்துச் செழுமையும் சீரிய நடையும் புதிய பரிணாமம் கண்டன. தமிழ் தான் வீடுபேறு அளிக்கும் ஒரே மொழி என்பது தான் அடிகளார் உரையின் மைக் கருத்து. ஆனால் கண்ணகி நாடகம் அடிகளாரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் அவர் மங்கையர்க்கரசி, திலகவதியார், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் தவ வாழ்க்கைகளையும் கண்ணகியின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பேசியதில் தெளிவாக வெளிப்பட்டது.


அதனால் தான் நாடகக் குழுவினர் அடிகளாரோடு படம் எடுத்துக் கொண்ட போது " கண்ணகி" யோடு சிலம்பைத் தூக்கிப் பிடித்தார்.

பின் குறிப்பு: நாடகங்கள் மெய்சிலர்க்க வைத்தன, அடிகளாரோடு இந்த மாணவர்கள் படம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கூடுதல் பாராட்டாகவும் மறைக்க முடியாத நிகழ்வாகவும் அமையும் என அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது. அடிகளாரிடமும் வேண்டுகோளை வைத்தோம், அவரும் மகிழ்வோடு இசைந்தார்.
படம் எடுத்துக் கொண்ட பின்னர் தான் அடிகளார் பேருரை ஆற்றினார்கள். அடிகளார் உரையும் நெகிழ்ச்சியாக அமைந்தது. அப்போதே என் முகநூலில் சொல்லாலும் செயலாலும் நெகிழ்த்திய குன்றக்குடி அடிகளார் எனப் பதிவு செய்தேன்
நலந்தா செம்புலிங்கம்
18.04.2018

Saturday 14 April 2018

சித்திரைத் திருநாளில் செந்தமிழ் வாழ்த்துக்கள்!!

செந்தமிழ் வாழ்த்துக்கள்!!

///***///***////





















மொழிச் சார்புமில்லாத
சமயவழிச் சார்புமில்லாத
முதல்நூலாம் திருக்குறளை
நல்கிய ஞாலமுதல்வன் 
பெயரால் காலம் அளப்போம்!

***







கதிரவன் நேர்கிழக்கில்
உதிக்கும் வானியல் நன்னாளில் 
பூக்கும் புத்தாண்டு
தமிழோடும் வள்ளுவனோடும்
கைகோர்த்துப் பூக்க வேண்டும்!
!****

சித்திரைத் திருநாளில்

செந்தமிழ் வாழ்த்துக்கள்!!


--நலந்தா செம்புலிங்கம்
சித்திரை 1, தி. ஆ 2049 (14.04.2018)

Sunday 8 April 2018

காமாராசர் உயிர்த்தெழுவார்!!

/// *** //// **** ////




















படிக்காத சித்தர் காமராசர்!  
ஜீவ சமாதி கொண்டுள்ளார்!
ஓரீரு தலங்களில் அல்ல 
இருபதாயிரம் பள்ளித் தலங்களில்!!

இது மிகையில்லா மொழியே!
எனினும் கவைக்கு உதவாத
புளங்காங்கித பெருமிதம் தான்!

அரசுப் பள்ளிகளின் நிலை
பெரும்பாலும் அவலம் தான்!
மாணவர் பற்றாக்குறை 
நிசர்தன பேருண்மை!

அழகப்பர் கண்ட
கல்விக்குடியாம் காரைக்குடியில்
இக்கசப்பிற்கு இனிப்பு மருந்தாய்
திகழ்கிறது ஒரு நகராட்சிப் பள்ளி!
நகராட்சியின நெஞ்சை
நிமிர வைக்கும் பள்ளி!!

அது தான்
இராமநாதன் செட்டியார்
நகராட்சி உயர்நிலைப் பள்ளி!
ஒழுக்கம், கல்வி, தூய்மை
ஆசரியர் அர்ப்பணிப்புணர்வு
மாணவர் சாதனைப் பட்டடியல்
என எண்திசையிலும்
வெற்றிக் கொடி நாட்டும்!
மெட்ரிக் பள்ளிகளையும்
திரும்பிப் பார்க்க வைக்கும்
நல்ல பள்ளி மக்கள் பள்ளி!!

அங்குமோர் பிர்ச்சனை
திடிரென வந்த காய்ச்சல் அல்ல
ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து
இருக்கிப் பிடித்துவரும் இடப் பிரச்சனை
அடிப்படை வசதி பற்றாக்குறை பிரச்சனை
எதிர்வரும் கல்வியாண்டு 
கொதிநிலை தாண்டி வெடிக்கக் கூடும்

ஆறாம் வகுப்பில் புதிய சேர்க்கை
85 மாணவர்க்கே இடமுண்டு, 
அதுவும் கொஞ்சம் நெருக்கடியோடு
இதுவரை வந்த விண்ணப்பமோ 225
மாடியில் கூட வகுப்பு நடத்தலாம்!
கூரை போட அனுமதி வேண்டுமே
தவிக்கிறது பெற்றோர் கழகம்!


நகராட்சி விரும்பிப் பார்க்குமா?
கல்வித் துறை துரிதமாய் பார்க்குமா?
ஆட்சியர் தான் ஆவன செய்வார?
இல்லை காமாராசர் தான்
உயிர்த்தெழுந்து வரவேண்டுமா?
                               
                                                 நலந்தா செம்புலிங்கம்
                                                 08.04.2018

Saturday 7 April 2018

தமிழ் ஞானத் தூரிகையில் வள்ளல் அழகப்பர்!

பட்டினத்தார் இறைஞானத்தின் கொடுமுடி. முடியரசன் பகுத்தறிவின் உச்சம். இவர்கள் எங்கேனும் ஒரு கோட்டில் சந்திப்பார்களா? 06.04.2018 நன்னாளில் பழநியப்பர் அரங்கிற்கு கைகோர்த்தே வந்தார்கள். எதற்கு? தேவகோட்டை இராமநாதனுக்கு தமிழ்ப்பாலும் ஞானப்பாலும் ஊட்டி வள்ளல் அழகப்பரை விரித்துரைக்கப் பணிப்பதற்கு!
                                                              ///***///
L.CT. L பழநியப்பர் அரங்கில் 06.04.2018-இல் நடைபெற்ற வள்ளல் அழகப்பரின் 109வது பிறந்த நாள் விழாவில் சிறப்புரையாற்றிய தேவகோட்டை இராமநாதன் கையாண்ட பட்டினத்தார், முடியரசனார் பாடல்கள், இதோ:
                                                                   


///***///
இறக்கும் போது கொடுபோவது ஏதுமில்லை
இடைநடுவில்
குறிக்கும்
இச்செல்வம் சிவன்                                                                   
தந்தது என்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமரை என்சொல்வேன் கச்சி 
ஏகம்பனே!
-பட்டினத்தார்








அள்ளி அள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்!
அழகாகப் பேசுதற்கே நாவை ஈந்தான்!
உள்ளமெனும் ஒருபொருளை உரத்திற்கீந்தான்!
உடம்பினையோ கொடுநோய்க்கே ஈந்தான் அன்றோ?
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
வினைமுயற்சி யாவையுமே கல்விக்கீந்தான்!
உள்ளதென ஒன்றில்லை என்றபோதும்
உயிர் உளதே கொள்கவெனச் சாவுக்கீந்தான்!
-கவியரசர் முடியரசனார்




என்பெற்ற
தாயாரும்
என்னைப்
பிணமென்றிகழ்ந்து
விட்டார்
பொன்பெற்ற மாதரும் எனைப்போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்
உன்பற்றொழிய ஒருபற்றுமில்லை உடையவனே!
-பட்டினத்தார்