Saturday 19 December 2020

பிள்ளையார் நோன்பு கார்த்திகைச் செல்வர்கள்

பிள்ளையார் நோன்பு கார்த்திகைச் செல்வர்கள் 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

            பிள்ளையார் நோன்பு நகரத்தார்களின் தொல்மரபு!


             நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது புது மரபு!! 




               பிள்ளையார் நோன்பு இழையை வீட்டில் எடுத்துக் கொள்வது தான் அதன் நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.  ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நாம் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.  மேலும் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது சங்கங்களுக்குப் புத்துயிரும் அளித்தது.  ஒரு புது மரபு வழக்கில் இருக்கிற தொல்மரபை கொஞ்சம் நீர்த்துவிடும்,  உண்மை தான் ஆனால் தவிர்க்க முடியாது.   இது தொல் மரபை நீர்க்கச் செய்தாலும் அதிலும் ஒரு  நன்மை விளைகிறது.  அதனால் தான் நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வதற்கும் அதற்கு ஏற்பாடு செய்வதற்கும் வரவேற்பு பெருகிவருகிறது. 


                  புது மரபோடு தொல்மரபையும் மாபெரும் பண்பாட்டுப் பணியை சென்னையில் ஆரவராமின்றி ஆறு நல்லுள்ளங்கள் ஆறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.  


                  சென்னையில் உள்ள நகரத்தார்கள் அனைவரும் தத்தம் வீடுகளில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் லட்சியம்.    





                  ஆனால் இயந்திர கதியான சென்னை வாழ்க்கையில் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும்  பணிக்குச் செல்லும் சூழலில் பிள்ளையார் நோன்பிற்கு வீட்டில் இழை எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களையும் நகரவிடுதிகள் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வைப்பது நடைமுறை சிக்கல்கள் தான்.  இழை மாவு சேர்த்தல் எளிதல்ல, இழை நூலும் பொரிகளும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.  


              இந்த நடைமுறைச் சிக்கலுக்கு தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு  R.V. தண்ணீர்மலை செட்டியார் தீர்வு காண விழைந்தார். 

              
               அந்த நடைமுறைச் சிக்கலுக்கு, பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகிய பிள்ளையார் நோன்புப் பொருட்களைப்  பாக்கெட் போட்டு இலவசமாகக் கொடுப்பது  தான் ஒரே தீர்வு என்றும் தெளிந்தார். 


             பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாத இப்பொருட்களை சென்னையில் நகரத்தார்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற தீர்விற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் திரு தண்ணீர்மலை செட்டியாருக்கு                  

              .SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra ---  S.S.S  வீடு, தேவகாேட்டை)                   

              V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)                   

                K. சீதாராமன்    (Swathi Agencies & Skandha Guru Chit funds  ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)                     

                கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)                   

                  ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)                  


ஆகியோர் துணை நிற்கிறார்கள்.  இக்குழுவினர்  2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு  பிள்ளையார் நோன்புப் பொருட்கள் வழங்கிவருகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இருமுறை வழங்கியதால், இந்த 2020 ஆண்டில் கோவிட் கட்டுபாடுகளுக்கிடையில் ஆறாம் முறையாக இப்பணியை மேற்கொள்கிறார்கள்.              

        
           இந்த ஆண்டு இன்று வரை பதிவு செய்துள்ள 1100 (ஆயிரத்து நூறு)க்கும் அதிமான குடும்பத்தினருக்கும்  பிள்ளையார் நோன்பு பொருள்களை இலவசமாக குறித்த இடங்களில்  குறித்த இடங்களில் வழங்கவுள்ளனர்.            


             ஒரு விளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றும்.  பிள்ளையார் நோன்பு எனும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும்  இந்த அறுவர் குழுவின் பணி அத்தகைய திருவிளக்கேற்றும் பணி ஆயிரம்  விளக்குளை ஏற்றும் திருப்பணி தான்.            




           நம் குலம் காக்கும் திருமுருகனைப் பேணி வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களைப் போல நம் குலம் பெருக பிள்ளையார் நோன்பை வீடுகளில் கொண்டாடும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும் ஆறு கார்த்திகைச் செல்வர்கள் வாழிய! வாழிய!! 


 வாசகர்கள் இப்பதிவோடு தொடர்பு என்னுடைய சென்ற ஆண்டு பதிவையும் வாசிக்க வேண்டுகிறேன். https://nalanthaa.blogspot.com/2019/12/blog-post_25.html  

 நலந்தா செம்புலிங்கம் 
 18.12.2020

Tuesday 15 September 2020

கரிசல் காட்டின் பேச்சையும் மூச்சையும் இலக்கியமாக்கிய கி.ரா

             

 

 கரிசல் காட்டின் பேச்சையும் மூச்சையும் இலக்கியமாக்கிய கி.ரா!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இது பாரதியின் நினைவு நூற்றாண்டு.  நாம் எவ்வளவு தான் பாரதியைக் கொண்டாடினாலும்  அவன் வாழ்ந்த காலத்தில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது.  பாரதியின் இறுதி சடங்கில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் மாறாத வடுவாக உள்ளது.   



           அது கடந்த காலம். நாம் சும்மா இருந்தாலும் பழைய பிழைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தாலும்  காலம் கடந்து தான் போகும்..  

           சாதனைகளாலும் சாதனையாளர்களை வாழும் காலத்திலேயே கொண்டாடுவதாலும் காலம் அதுவாகக் கடந்து போகாமல் நாம் எழுச்சி நடை பீடு நடை போடலாம்.

        அத்தகைய நன்னடை ஒன்று நாளை 16.09.2020 அரங்கேறுகிறது.

          ஆம் கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் அவருடைய 98 ஆம் பிறந்த நாளான 16.09.2020 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறார்.  

                 கிராமிய மணம் கமழும் இலக்கியத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றத் தருபவர் கி.ரா  அவருடைய எழுத்துக்களும் சாதனைகளும் குறிப்பாக கரிசல்வட்டார வழக்கு அகராதி வட்டார மொழி இலக்கியத்திற்கே புதிய வலிமையையும் பொலிவை வழங்குகின்றன.  இது அனுமன் சீரஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொணர்ந்த தீரத்தினைப் போன்றது. 

               சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[2] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளால் கி.ரா அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் விஞ்சிய பேராளுமையாவர்.

               அவரை இனிக் கொண்டாடவதற்கான வழி அவர் பெயரால் ஒரு விருதை ஏற்படுத்துவது தான்.


தமிழ் இலக்கியக்கியத்திற்கும் தமிழ் வாசகர்களுக்கும் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிற நிறுவனம் கோவை விஜயா பதிப்பகம்.  எந்தப் பதிப்பகத்தின் நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அந்த எழுத்தாளருக்கு முதல் பாராட்டு விழா எடுக்கத் துடிப்பது விஜயா பதிப்பகம். ஆண்டுதோறும் ஜெயகாந்தன் விருது,  கவிஞர் மீ.ரா விருது, புதுமைப்பித்தன் விருது, சக்தி வை கோவிந்தன் விருது, வானதி திருநாவுக்கரசு விருது  எனப் பல விருதுகளை விஜயா வாசகர் வட்டம் வழங்கிவருகிறது.


            அந்த வரிசையில் ஒரு மிகப் பெரிய மடைமாற்றத்தோடு விஜயா வாசகர் வட்டம் இந்த ஆண்டிலிருந்து வாழும் படைப்பாளர்  கி.ரர பெயரில் விருது வழங்கவுள்ளது. முதல் ஆண்டின் விருது மிகத் தகுதி வாய்ந்த கிராமியப் பாடகர் கண்மணி குணசேகரனுக்கு  வழங்கப்படயிருக்கிறது.


 
                இந்த விருதிற்கு மணிமகுடமாகத் திகழும் சிறப்பு இந்த விருதுக்கான நிதியை வழங்குவது வணிகத்திலும் மனிதநேயத்தை நிலைநாட்டுகிற புகழ்பெற்ற சக்தி மசாலா நிறுவனம்.  சக்தி மசாலா நிறுவனம் தரத்திலும் உள்ளூர் வணிகத்திலும் ஏற்றுமதிகளிலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வகிக்கும் நிறுவனம்.  பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு எனப் பல சமூகப் பார்வையிலும் முன்னுதாரணமாக சக்தி மசாலா திகழ்கிறது.




          விருது நாயகர் விருது பெறுபவர் விருதை ஊக்குவிப்பவர் என முப்பரிமாணங்களிலும் இவ்விருது முன்னோடியாகத் திகழ்கிறது.  வாசகர் திருவிழா நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப் படுத்திய கோவை விஜயா பதிப்பகம் இந்த முப்பரிமாணங்களையும் ஒருங்கிணைத்துள்ளது.

                 இதுவே இலக்கிய உலகிற்கு விஜயா பதிப்பகம் காலத்தினால் செய்யும் ஞாலத்தில் பெரிய பணி

Wednesday 2 September 2020

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!

 

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!






          குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

           மடிதற்றுத் தான்முந் துறும். (1023)

 

        இந்தத் திருக்குறளிற்கு எத்தனையோ உரைகளைப் படித்திருப்பீர்கள். பரிமேலழகர் உரையோ பழைய உரையோ அவை யாவும் ஏட்டில் துலங்கும் இயல் தமிழ் தான்.

 


          இன்று இக்குறளிற்கு ஒரு உரை நம் கண் முன் செயல் வடிவம் பெறுகிறது. எங்கே? காரைக்குடியில், காமராசர், 1963 இல் திறந்த வைத்த பள்ளியில்!

       

       ஏராளமான அரசுப் பள்ளியில் மாணவர் பற்றாக்குறையில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் காரைக்குடியில் ஒரு வியத்தகு அதிசயம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

 

        2013-2014 கல்வியாண்டில் இராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுஅப்போது மாணவர் எண்ணிக்கை 218.  கடந்த 2019 -2020 கல்வியாண்டில் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1325.  ஆறு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கைஆறு மடங்கு  உயர்ந்திருக்கிறது.  

 

இப்பள்ளி மாணவர்கள் நடையிலும் உடையிலும் மிடுக்காகத் திகழ்வதோடு  வகுப்பறை கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள் இலக்கிய போட்டிகளில்  என பல்துறைகளில் சாதித்தும்   பொதுத் தேர்விலும்   வெற்றிக் கொடியும் நாட்டிவருகிறார்கள்இதனால் தான் காரைக்குடியினர் மட்டுமல்லாது வெளியூரில் உள்ளவர்களும் இப்பள்ளியில் தம் பிள்ளைச் சேர்க்க விரும்புகிறார்கள்அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்களும் அதிகரித்து வருகின்றது.

     


       ஜுன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டில் தம் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பிப்ரவரி மாதமே பள்ளியை அணுகுவர். 2018 - 2019 ஆண்டில் 95 மாணவர்களை மட்டுமே புதியதாகச் சேர்க்கக் கூடிய நிலையில் 300க்கு மேற்பட்டோர் இப்பள்ளியில் சேர முயன்றனர்மாணவர் சேர்க்கை முடிந்தது இனிமேல் விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்படமாட்டது என்று பிளக்ஸ் பேனர் வைக்கும் நிலை ஏற்பட்டதுபிறகு ஷிப்ட் முறையில் 6 ஆம் 7 ஆம் வகுப்புகளை நடத்த முடிவு செய்து அதன் பேரில் கூடுதலாக 200 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

 

        2019 - 2020 கல்வியாண்டின் தொடக்கத்தில் இப்பள்ளி வளாகத்திற்குள் இருந்த தொடக்கப் பள்ளி புதிதாகக் கட்டப்பெற்ற மற்றொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் இந்த உயர் நிலைப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்புறைகள் கிடைத்ததுஅதனால் ஷிபிட் முறையிலிருந்து இயல்பு முறைக்குத் திரும்பியோடு கூடுதலாக மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

 

       இந்த 2020 -2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17.08.2020 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது, 200 மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளக் கூடிய நிலையில் 700 மாணவர்கள் விண்ணப்பித்தனர்வேறு வழியில்லாமல் 500 மாணவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

 


       இத்தனை முன்னேற்றங்களுக்கு இடையில் இப்பள்ளியில் இட நெருக்கடியும், சுகாதார வசதி போதாமையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகளாகத் தொடர்ந்தனபெற்றோர் ஆசிரியர் கழகம் சளைக்காமல் கோரிக்கை மனுக்களைச் சமர்பித்த வண்ணம் இருந்ததால் படிப்படியாக தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 

       இப்பொழுது 500 மாணவர்கள் திருப்பிவிடப்பட நிலை எல்லா ஊடகங்களிலும் எடுத்துரைக்கப்பட்டதோடு சமூக வலைத் தளங்களில் இந்த அதிசியப் பள்ளியின் புகழ் காட்டுத்தீயாகப் பரவியதுதமிழக அரசு இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை தேவைகளை தானே உணர்ந்து, கொரோனா முடக்கத்திற்கு இடையிலும் site survey building plan approval, fund allocation என
 
மின்னல் வேகத்தில் களமிறங்கியுள்ளதுடிசம்பர் மாதத்திற்குள் ஐந்து வகுப்பறைகள் கிடைக்கும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறுகின்றனர்.

                  

            முன்னுதாரணமான தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்கள், அடித்தளமாகவும் அரணாக நிற்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இந்த வெற்றி வரலாற்றின் முப்பரிணமானங்களாவர். இவர்களின் திருவினையும் தமிழக அரசின் செயல் வேகமும்  

 

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும் 

 

எனும் குறளை நினைவூட்டுகிறதுபரிமேலழகர், தன் குடியை உயரச் செய்வேன் என்று முயல்பவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துறும் என்பார்உள்ளபடி இப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் நன்முயற்சிக்கு தமிழக அரசு தனது அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முன் நிற்கிறது.

 

தமிழக அரசே முன் நிற்பதால், புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணி முடுக்கிவிட்ட நாளிலேயே கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கவும் அனுமதித்துள்ளதுஅதற்கேற்ப இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கையை 01.09. 2020  தொடங்கி முதல் நாளிலேயே  நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 

        கல்வி வணிகமயமாவதை எதிர் கொள்ள இதைப் போன்ற பள்ளிகளே சரியான தீர்வாகும். ஊருக்கு ஒரு இராமநாதன் செட்டியார் பள்ளி உருவாகட்டும்!

 

Thursday 16 July 2020

பல நூறாண்டுகளும் சில ஆயிரமாண்டுகளும்......



அறிவியல் உலகம், அதாவது உலக அரசியல் அங்கீகரிக்கும் அறிவியல் உலகம் கொரோனாவிற்கு மருந்து இல்லை என்கிறது.

நான் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டவன்.  அதனால் முதலிலேயே 

கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை

Siddha Dr Veera Babu
என மூன்று முறை சொல்லிவிடுகிறேன். எனினும்  அறிவியல் உலகின் பால் நான் கொண்டுள்ள நம்பிக்கையால் விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் எனவும் உறுதி கூறுகிறேன்
 
உள்ளபடியே ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கண்டுபிடித்து நோயை அடக்குவோம் என்ற  மருத்துவ அறிவு நமக்கு வெள்ளைக்காரன் தந்தது தான்.

அந்த அறிவின்படி அறிவியல் பூர்வமாக கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஐதிராபாத் நிறுவனத்தின் தடுப்பு ஊசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சோதனைக்கு வருகிறது, வேறு சில நிறுவனங்களின் தடுப்பு ஊசிகளும் வரவுள்ளதாக செய்திகள் வருகின்றன.  இந்த சோதனைகளுக்கு முடிவு சாதமாக இருக்கும் என நம்புவோம்.  ஆனால் முடிவு எப்போது வரும்?  சில பல மாதங்கள் ஆகலாம்.  தடுப்பு ஊசி வருமுன் காப்பதற்குத் தானே?    நோய் வாய்பட்டவர்களுக்கு  இது மருந்தாகவும் செயல்படுமா?

அதற்குள் இன்னும் எத்தனை லட்சம் மக்களுக்குப் பரவும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. உலக வரலாற்றில் மிகக் கோரமான ஹிரோஷிம்மா நாகாசாகி அணுகுண்டு வெடிப்பு கூட ஒரு எல்லைக்குள் நின்று விட்டது.  கொரோனா உலகம் முழுவதை வதைத்துச் சிதைக்கிறது.

நிற்க, வெள்ளைக்காரன் வருமுன்னர் நாம் அறிவில்லாமலா இருந்தோம்?  இல்லை இல்லவே இல்லை, பேரறிவோடு இருந்தோம்.

இரண்டாமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 

என திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அதில் அவர் காலத்திற்கு முந்திய நூற்களை மருத்துவ நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

வெள்ளைக்காரனின் அறிவு பல நூற்றாண்டுகள் பழைமையானது.  நமது பாரம்பரிய அறிவு சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மையாது. 

நோயை எப்படி எதிர்கொள்வேண்டும் என்பதில் ஒரு விவாதம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.  நோய் கிருமியைக் கொல்லும் முறை அந்தக் கிருமியின் வடிவோமோ வீரையமோ மாறாமல் இருக்கும் வரை தான் எடுபடும்.  நோய்க் கிருமியின் வீரியம் வளர வளர மருந்தின் வீரயத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது.  பக்கவிளைவுகளும் அதிகரிக்கின்றன.  இந்த சிகிச்சை முறை சங்கிலித் தொடர நீடிக்கிறது.  அதற்குள் வணிகமும் செழிக்கிறது.

நோயை எதிர்கொள்ள நோயாளின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்பது அதிகரிப்பது என்பது எளிமையான உண்மை.  எளிமையான உண்மைகள் முக்காலத்திற்கும் பொருந்தும்.  


 

இதுவே அனேக பாரம்பரியமருத்துவங்களின் அடிப்படைத் தத்துவமாகும். இதற்கு சென்னை நகரில் மட்டும் ஓராயிரம் சான்றுகளை சித்த மருத்துவர் வீரபாபு உலகின் கண் முன் நிறுத்தியுள்ளார்.  அறிவியல் உலகம் கண் திறந்து பார்க்குமா?
நலந்தா செம்புலிங்கம்
16.07.2020

Wednesday 27 May 2020

தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!


தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு, இது புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, பல இளைஞர்களை புகழணியில் ஏற்றிவிட்ட நிகழ்ச்சியும் தான்.  இந்தக் கவித்துவத் தலைப்பு மிகவும் பிரபலமானதற்குக் காரணம் இது மாபெரும் உண்மையைப் பதிவு செய்தது தான்.  ஆம் தமிழர்களால் பேசாமல் இருக்கவும் முடியாது, மேடைப் பேச்சுக்களைத் துய்க்காமல் இருக்கவும் முடியாது.


           மேடைப் பேச்சு தமிழக அரசியலில் செயலுத்திய ஆதிக்கம் மாணப் பெரியது.  அரசியல் பிரச்சாரங்களுக்கு நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி எனத் தளங்கள் விரிந்து வந்தன, அண்மைக் காலங்களில் சமூக வலைத்தங்களில் அரசியல் பிரச்சாரம் பேராதிக்கம் செலுத்தி வருகிறது. 

       காலங்கள் மாறினாலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் பூத்த வண்ணம் இருந்தாலும்  அரசியல்  அரங்குகளிலும் இலக்கிய மன்றங்களிலும் நல்ல மேடைப் பேச்சுக்களுக்கு வரவேற்பு தொடர்கிறது.

       
உலகத்தையே முடக்கும் கொரோனா தொற்று நோய் பல சவால்களை மனிதகுலத்தின் மீது ஏவியுள்ளது.  ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவொரு மனிதனோடும் அணுக்கமாக இருக்கக் கூடாது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்பது இத்தொற்றினால் ஏற்பட்டுள்ள பெரிய தாக்கம்.  இதனால் கல்வித் துறை போக்குவரத்து தொழில் துறைகளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மேடைப் பேச்சு மன்றங்கள் மட்டும் கூட்டம் நடத்த முடியாது?   முடியாது என்பதல்ல விடை , கூடாது என்பது தான் சரியான சவால்.

      இந்த சவால் தமிழ் மன்றங்கள் தொழில் நுட்ப உதவியோடு எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது.  WEBINAR மற்றும் அதைப் போன்ற தொழில் நுட்பங்களின் வாயிலாக பல தமிழ் மன்றங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

     சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் go to meeting எனும் இத்தகைய தொழில் நுட்பச் செயலி வாயிலாக  28.05.2020 வியாழக் கிழமை சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை (இந்திய நேரம் மதியம் 2.30 முதல் 4.00 மணி வரை) புகழ் பெற்ற மேடைப் பேச்சாளர் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பேருரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

      இந்நிகழ்ச்சி அந்தக் கலைக் கழகத்திற்கு மட்டுமல்லாது அத்தொழில் நுட்பத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

          தொலைத் தொடர்புத் துறையும் கணிப்பொறி மென்பொருள் துறையும் மின்மயமான 21 நூற்றாண்டின் ஆம் நாயகர்கள் தாம்.

           சகல துறைகளிலும் அந்த வல்லவர்கள் கோலோச்சினாலும் அவர்கள் ஒரு தொழில்சார் வட்டத்திற்குள் அரியணையேகுபவர்கள் தான்.

          இப்போது தமிழ் மன்றங்கள் அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதாக பலர் நினைக்கிறார்கள்.

           உள்ளபடியே அத்தொழில்நுட்பங்களுக்குத் தமிழ் மன்றங்கள் தான் பெரிய மேடை அமைத்துக் கொடுத்து அத்தொழில்நுட்பங்களை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுபோய் சேர்க்கின்றன.

           அதிலும் இது தேவகோட்டை இராமநாதன் பேருரை, மிக மிக நேர்த்தியான தலைப்பும் அமைந்திருக்கிறது: இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ   இந்நிகழ்ச்சி உலகளாவிய கவனம் பெறும் மாபெரும் நிகழ்ச்சியாக அமையும்.  

            இது, தொழில் நுட்பத்துறையினருக்கு சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் நல்கும் வரம் தான்!

நலந்தா செம்புலிங்கம்
27.05.2020