Wednesday, 8 January 2020

இடி நம்மை கேட்டுத் தலையில் விழுவதில்லை



இடி நம்மை கேட்டுத்  
     தலையில் விழுவதில்லை!!        

      மக்கள் குடியரசுத் தலைவர், மாணவர்களின் நாயகர், நம்பிக்கை தூதர் எனப் பன்முகம் கொண்டவர் அப்துல் கலாம்.  

               அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்படுதற்கு முன்னரே ஊடகங்களால் கொண்டாடப்பட்டவர்.
        
                அது அவருடைய அவருடைய சுயசரிதையான அக்னிச் சிறகுகள் நூலின் வெற்றியை தொடர்நத விளைவு எனக் கருதுகிறேன்

                ஊடகங்கள் கொண்டாடுவதற்கு முன்னரேயே அப்துல் கலாம் அவர்களின் மாண்பையும் திருக்குறள் பற்றையும் உணர்ந்து கொண்டாடியவர் நம் நெஞ்சில் நிற்கும் அழகப்ப இராம் மோகன் ஐயா.

                ஏன் நினைவு சரியாக இருக்குமேயானால் 1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்னிசிறகுகள் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  சென்னை புத்தகத் திருவிழாவில் அக்னிசிறகுகள் பரபரப்பாக விற்பனையானது. அக்னிசிறகுகள் நூல் கல்லூரிகளுக்குள் காட்டாற்றாற்று வெள்ளமாகப் பாய்ந்ததுஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனை என்ற தமிழ் பதிப்புலகம் நினைத்துப் பார்த்திராத இலக்கை வென்றதுஅப்துல் கலாம் இளைஞர்களின் நாயகரானார் அதன் விளைவாக ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டார்.

               சென்னை புத்தகத் திருவிழாக்கு பிறகு  வாசகர்களுக்கு அப்துல் கலாம் அவர்கள் நூலில் கையெழுத்திட்டுத் தரும் நிகழ்ச்சி  சென்னையின் புகழ் அடையாளங்களுள் ஒன்றான ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்ததுஅது காலை நிகழ்ச்சிஅங்கு தமிழ் நாட்டின் புத்தக உலகமே கூடியிருந்தது.

              அன்று மதியம் 2.00 மணியளவில் அந்த  ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடைக்கு ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் காமராசர் அரங்கில் ஒரு பெரிய திருக்குறள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் அப்துல் கலாம் கலந்து கொள்ளும் விழா தான்ஆனால்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் கண்ட புத்தகத் துறையே கூடியிருந்ததுமதியம் காமராசர் நடைபெற்ற திருக்குறள் விழாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகத் துறையினர் தான் வந்திருந்தோம்அந்தத் தேதியில் அக்னிச் சிறகுகள் நூல் தான் பிரபலம்.
 
                மதியம் 2.00 மணிக்கு இலக்கிய விழாவாஒரு இலக்கிய விழாவை கொளுத்தும் வெயில் நேரத்தில் நடத்தினால் யார் வருவார்கள்? எனப் பலரும் புருவங்களை உயர்த்தினார்கள்

                யார் வந்தாலும் வராவிட்டாலும்அந்த விழாவிற்கு போக வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்ததுதினமணி நாளிதழும் எங்கள் புத்தகக் கடையின்  திருக்குறள்.ஆர்வமிக்க மூன்று வாசகர்களும் தான் அந்தக் கடப்பாட்டிற்கு காரணமானவர்கள்

                இந்தத் திருக்குறள் விழாவைப் பற்றி அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தினமணி மிகச் சிறப்பான அறிமுகத்தையும்  முன்னோட்டத்தையும் தொடர்ந்து வழங்கியதுஅந்த விழாவிற்குள் பல நிகழ்ச்சிகள் அவற்றுள் முக்கியமானது தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture  எனும் நூல் வெளியீட்டு விழா என்பதையும் அந்த நூலின் சிறப்புகளையும் மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட அந்த விழா பற்றிய முன்னோட்டத்தையும் மிகத் தெளிவாக வெளியிட்டதுஅவை மூன்று நாட்கள் தொடராக வெளியிடப்பட்டதால் மிகப் பெரிய எதிர்பபார்ப்பையும் ஏற்படுத்தியது. தினமணியின் கட்டுரைகள் என்னை சுண்டி இழுத்ததுஅந்த நூலைப் பற்றியும் விழாவைப் பற்றியும் பல வாசகர்களிடம் எடுத்துச் சொன்னேன்நூலின் விலை 600/-  ஆனால் அந்த நூலின் தாள் அச்சமைப்பு போன்றவற்றிற்கே அதற்கு மேலும் கொடுக்கலாம்உள்ளடக்கம் மதிப்பிடவே முடியாததுஎனினும் அன்றைக்கு 600/- ரூபாய் என்பது சற்று அதிகமாகத் தெரிந்ததுஅதனால் மூன்றே மூன்று வாசகர்கள் தான் என்னிடம் முன்பணம் தந்தார்கள்.

                   ஈடு இணையில்லாத அந்த  தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் இருமொழி நூலை பைபிள் தாளி்ல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அற்புதமான நூலை பதிப்பித்தவரும் அந்த விழா நடத்தியவரும் மிக அண்மையில் (12.12.2019) நம்மை விட்டுப் பிரிந்த திருக்குறள் நெறியில் வாழந்த அழகப்பா ராம் மோகன் ஐயா தான்.

                   அந்த நூலைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் வேறு சிலரால் பதிவு செய்யப்பட்டிருப்பதால், நானும் அதை எடுத்துரைப்பது கூறின கூறலாகிவிடும்அந்த நூல் வெளியீட்டு விழாவை ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகும் ன்னால் மறக்க முடியவில்லை.

                 மீண்டும் நினைவூட்டுகிறேன்அது மதியம் 2.00 மணியளவில் தொடங்கும் விழாதினமணியில் விழா முன்னோட்டத்தை படித்திருந்ததாலும் நான்கு புத்தகங்களுக்கு பதிவு செய்திருந்ததால், விழா நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசியிருந்ததாலும் மற்ற விழாக்களைப் போல கூட்டம் சேர்ந்த பிறகு கூட்டத்தை ஆரம்பிப் போம் என்ற எண்ணத்திற்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்அதனால் 1.50 மணியளவில் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் கூட்டமெல்லாம் கூடும் என்ற நம்பிக்கை இல்லைஆனால் விழா தொடங்குவதற்கு முன்னரே அரங்கம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பிவிட்டதுஅதற்குக் காரணம் இந்த விழா அமைப்பாளர்கள் தமிழகமெங்கும் சுற்றி வந்து எல்லா திருக்குறள்  அமைப்பினரை இனங்கண்டு  அந்த விழா குறித்தும் நூல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த திருக்குறள் தொண்டர்களை அழைத்து தான். அது சாதாரணக் கூட்டம் அல்ல, ஆழ்கடலில் மூழ்கி  எடுத்த முத்துக்களைப் போன்றோரின் கூட்டம்அத்தகைய கூட்டம் மதியம் 2.00 மணியல்ல நடுநிசி 2.00 மணிக்கும் திருக்குறளிற்காகக் கூடும்.

            அந்தக் கூட்டத்தில் வழக்கமான வரவேற்புரை தலைமையுரை நூல் வெளியீடு போன்றவற்றோடு நிறைவு பெற்றிடவில்லைகூட்டு வழிபாடு தியானம் எல்லாம் நடந்ததுஒவ்வொன்றும் நிகழ்ச்சி நிரலில் குறித்தபடி  கடிகார இயக்கம் போல  நிமிடக் கணக்கு பிசிறாமல் சீராக நிகழ்ந்தது.

              அந்தக் கூட்டம் சில படிப்பினைகளைத் தந்தது. ஒரு விழாவிற்கு பெருங் கூட்டம் கூட வேண்டுமெனில் மிகப் புகழ்பெற்ற பிரமுகர், உணர்ச்சிகரமாக அவை ஆளும் பேச்சாளர்  போன்றரை வைத்து விழாவை நடத்த வேண்டுமென பொதுவாக நினைக்கிறோம். அதுவும் ஓரளவு சரியானது தான்ஆனால் ஒரு விழாவிற்கு நல்ல நோக்கம் இருக்க வேண்டும் அல்லது நல்ல நோக்கத்திற்காகத் தான் விழா எடுக்கப்பட வேண்டும் என்பது தான் இராம் மோகன் ஐயா அளித்த முதல் படிப்பினை. நோக்கம் எவ்வளவு சிறந்ததாயினும்  அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பிடிப்பினைஇவற்றையெல்லாம் விட ஆகச் சிறந்த பிடிப்பினை விழாவிற்கு தகுதியானவர்களைத் தேடி அழைக்க வேண்டும் என்பதாகும்.

               இராம் மோகன் ஐயா அவர்கள், உலகெங்குமுள்ள திருக்குறள் ஆர்வலர்களைப் படையாகத் திரட்டி  பல ஆண்டுகள்  கடுமையாக உழைத்துதமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture  எனும்  மிகச் சிறந்த தொகுப்பை
  உருவாக்கினார்கள்அந்த நூலின் வீச்சினால் ஐயா ஒரு மாபெரும் திருக்குறள் ஆர்வலர் என்ற குணநலத்திற்கும் அவர்களின்  மற்ற பல குணநலங்களை நம் உணராமல் இருந்துவிடுகிறோம்.

             திருக்குறளுக்கு அப்பாலும்  தமிழ் மொழி, தமிழ் இனம், இனத்தின் முன்னேற்றம்  என ஐயாவின் ஈடுபாடு கோபுரமாக உயர்கிறதுமாணவர் நலமும் முன்னேற்றமும் இவற்றுள் உட்கிளையாக உள்ளது.   தமிழால் வளம் கூட்டுக என்பது உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் தாரக மந்திரம்.  

              தமிழ் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இழந்த மேன்மையை மீட்கவும் அதனினும் மேலாக உயர்ந்த ஓங்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவுஅக்கனவு மெய்ப்பட  தமிழ் வட்டம் எனும் உலகளாவிய அமைப்பைத் தோற்றிவித்தார்கள்
அந்தத் தமிழ் வட்டம் உலகெங்கும் பிரிட்டிஷ் கவுன்சில், லயன்ஸ், ரோட்டரி அமைப்புகள் போல உலகெங்கும் கிளை விரித்து பரவ பல செயல் திட்டங்களும் வகுத்துள்ளார்கள்அறிவை வளர்க்கும்  நூலகம் படிக்கம் கணனி அறை எனப் பல உள்கட்டமைப்புகளைக் கொண்ட வள்ளுவர் அறிவகம் எனும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது ஐயாவின்  பெருங்கனவாகும்.   அதற்கு முன்னுதாரணமாக தமது சொந்த ஊரான கானாடுகாத்தான் (சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு) எனும் சிற்றூரில் ஒரு வள்ளுவர் அறிவகத்தை எழுப்ப விழைந்தார்கள்.

                       எந்தப் பணியையும் சீராகவும் செம்மையாகவும் திட்டமிட்டு நிறைவேற்றும் ஆற்றல் மிக்க ஐயா அவர்கள் கானாடுகாத்தானில் வள்ளுவர் அறிவகம் எழுப்ப கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வந்தார்கள்முதலில் தமக்குச் சொந்தமான மனையை இப்பணிக்கு அர்ப்பணித்தார்கள்அந்த வள்ளுவர் அறிவகத்திற்கு கோடிக் கணக்காக ரூபாய் திட்டத்தில் ஒரு கட்டிடம் ஒன்றைக் கட்டிட விழைந்தார்கள்அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்த வரும் வேளையில் தான் அவர்கள் கொடிய நோய்க்கு ஆளானார்கள்மருத்துவ சிகிச்சைகளுக்கும் வலிகளுக்கிடையிலும் வள்ளுவர் அறிவகப் பணியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். முன்னேற்பாடுகள் பெரும்பாலும் நிறைவேறிய நிலையில் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஒரு நாளை உத்சேதமாகக் குறித்தார்கள்நோயும் சிகிச்சையும் அத்திட்டத்தை ஊடுருவினஅடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதுநோய் தீவிரமானது, ஐயாவும் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாப் பணியில் தீவிரமானார்கள்நோயின் கொடுமை ஐயா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியதுஐயா அவர்கள் தான் தனது மண்ணைத் தொட முடியாத நிலை என்றாலும் அமெரிக்காவில் இருந்தவாறே நடத்தப்பட வேண்டும் என தீர்மானித்தார்கள்.



                   இராம் மோகன் ஐயாவுடன் திருக்குறள் போல ஒன்றிய அவர் தம் துணைவியார் மீனாட்சி ஆச்சி அவர்கள் கானாடுகாத்தான் வந்து வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டு விழாவை 26.12.2019 நடத்த எல்லா ஏற்பாடுகளை செய்தார்கள்ஐயா அவர்கள் காணோலி வாயிலாக அமெரிக்காவிலிருந்து கானாகாத்தான் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.

                     ஐயகோ, விழாவிற்கு பதிநான்கு நாட்களுக்கு முன்னர் 12.12.2019 ஐயாவை இழந்தோம். திருக்குறளை கற்று உணர்ந்து அந்நெறியில் வாழ்ந்த இராம் மோகன் ஐயாவுடன் நாமும் பழகியிருக்கிறோம் அவர்களின் அப்பழுக்கில்லா அன்பிற்குப் பாத்திரமாகியுள்ளோம் என்பது நம் வாழ்க்கை பேறாகும்.

                     அவர்களை நாம் இழக்கப் போகிறோம் என்பதை  அறிந்திருந்தோம் எத்தனை ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் இழப்பு இழப்பு தான். விழா கைக்கு எட்டும் தொலைவில் இருந்த வேளையில் நாம் ஐயா இழந்திருப்பது பேரிடி தான்.

                     என்ன செய்யஇடி நம்மை கேட்டுத் தலையில் விழுவதில்லை.

நலந்தா செம்புலிங்கம்
20.12.2019


Wednesday, 25 December 2019

நினைந்தூட்டும் தாயின் அக்கறை

பிள்ளையார் நோன்பு வந்து விட்டது(31.12.2019)

       கோலம், தடுக்கு, சங்கு ஊதுதல் என இந்து மதத்திற்கு பொதுவான பழக்கங்களில் கூட நகரத்தார்கள் ஒரு தனித்துவ அடையாளத்தை முன்னோர்கள் உருவாக்கி வைத்துகிறார்கள்.  நகரத்தார்களுக்குரிய மிக அழுத்தமான தனித்துவ அடையாளம் பிள்ளையார் நோன்பு தான்.



       பிள்ளையார் நோன்பு  சவால்கள் மிக்க கொண்ட்டாடமான விழா தான்.  அதற்கு விதவிதமாகப் பலகாரங்கள் செய்வது பாடுமிக்க வேலை தான். எனினும் பல பெண்கள், அது,  தங்கள் திறமையைக் காட்டுவதற்கான சவாலாகக் கருதி வரவேற்கிறார்கள்.  அடுத்து இழையைச் சுடரோடு விழுங்வதாக என்பது எல்லோருக்கும் பொதுவான சவால்.  புது மாப்பிள்ளைகளுக்கு ஒரு கெளரவப் பிரச்சனையும் கூட !

          கூடவே எங்கே இழை எடுத்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், பல ஊர்களில் நகரவிடுதிகள்  இருப்பதாலும்  எல்லா ஊரிலும் சங்கங்கள் இருப்பதாலுமும், அவற்றின் முக்கிய பணிகளுள் பிள்ளையார் நோன்பும் ஒன்றாகயிருப்பதாலும்,  நம்முடைய பாரம்பரிய 76 ஊர்களிலும் பொது இடங்களில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டதாலும் ஒவ்வொருவருக்கும் இரண்டு அமைப்புகளிலிருந்தாவது அழைப்பு வந்திருக்கிறது.

        பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வதற்காகப் பொது இடத்தில் கூடுவது ஒரு சமூக நிகழ்ச்சியாகவும் பரிணமித்துள்ளது, பெரிதும் வரவேற்கப்படுகிறது.

        எங்கே இழை எடுத்துக் கொள்வது வீட்டிலா? பொது இடத்திலா? இந்த விவாதத்திற்கே இடம் கொடுக்காமல் இரண்டு இடங்களிலும் எடுத்துக் கொள்பவர்கள் தான் இன்று அதிகமாகவுள்ளனர். பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளுவதற்கு ஆண்டிற்கு ஆண்டு வரவேற்பும் அதிகரிக்கிறது, இந்த வேகம் தொடர்ந்தால் வீட்டில் இழை எடுப்பது அருகிவிடுமோ என்று கூடத் தோன்றுகிறது.  அப்படி ஒருபோதும் ஆகாது எனச் சிலர் ஆறுதல் சொல்வார்கள்.  வேறு சிலர்  அதனால் என்ன? என மறித்தும் கேள்வி கேட்பார்கள்.  

       பிள்ளையார் நோன்பிற்கு தேவைப்படும் முதன்மைப் பொருளான இழை மாவு மற்றும் சில வகைப் பொரிகள் வெளியூர்களில் கிடைப்பது உள்ள சிரமமும்  பலகாரங்கள் செய்வதற்கு உரிய வசதி மற்றும் நேரக் குறைவினாலும் வெளியூர்களில் வசிப்பவர்களும்  பிள்ளையார் நோன்பைக் கூட்டாகக் கொண்டாடும் நிலை ஏற்பட்டது.  பல ஊர்களில் ஆரம்ப காலத்தில் சங்கம், விடுதி இருந்தாலும் இல்லாவிடினும் யாரேனும் ஒருவர் வீட்டில் கூடி எல்லோரும் இழை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் வசதிக் குறைவான சூழலிலும் நமது மரபைக் கடைபிடித்த நற்செயலாகும். எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு என்ற கூடுதல் பரிசும் இதில் கிடைத்தது.  பிறகு சங்கத்தில் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடுவது பழக்கத்தில் வந்தது.  சங்கங்களின் மிக முக்கிய செயல்பாடாக முக்கியத்துவம் பெற்றது.

             இந்து மத பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.  அதைத் தான் கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்றார்.  ஆனால் அந்தக் காரண காரியத்தை நாம் உணர்ந்து கடைபிடிக்கவிட்டால் அது வெற்றுச் சடங்காகிவிடும்.  காலப் போக்கில் நீர்த்துப் போகும்.
                      
         
       
   பிள்ளையார் நோன்பு பொது இடங்களில் கொண்டாடப்படும் காலகட்டத்திற்கு  முன்னர் வெளியூர்களில் வசிக்கும் திருமணமாகாத இளைஞர்களை அந்த ஊரில் வசிக்கும்  தந்தை நிலையில் அண்ணன் நிலையில் உள்ளவர்கள் இழை எடுத்துக்க வீட்டுக்கு வா என உரிமையோடு கட்டளையிடுவார்கள்.   இன்றும் மகபேறு உண்டாகியிருக்கும் பெண்களுக்கு இரண்டு இழை எடுத்துக் கொடுப்பதும் பிள்ளையார் நோன்பின் மிக மிக முக்கியமான மகத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றன.  அது தான் வம்ச விருத்தி.  பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்சவிருத்தி எனில் வீட்டில் இழை எடுத்துக் கொள்வது அவசியமாகும். கூடுதலாக பொது இடங்களிலும் இழை எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்பட்டுவிட்டதால் வீட்டில் இழை எடுத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்துவிடக் கூடாது.

         பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்ச விருத்தி என்று உணர்ந்தோடு பிள்ளையார் நோன்பை வீட்டில் கொண்டாடும் மரபை மீட்டெடுக்க வேண்டும் எனக் கருதிய தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு எம். தண்ணீர்மலை அவர்கள் அந்த நல்ல எண்ணத்திற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்.  அதன்படி பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகியவைகளை பாக்கெட் போட்டு இலவசமாக 2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு வழங்கிவருகிறார்கள். மரபை இந்த நற்பணியில் திரு  எம். தண்ணீர்மலை அவர்களுக்கு மூன்று இளைஞர்கள் துணை நிற்கிறார்கள்.  

                  S.S.S.SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra ---  S.S.S  வீடு, தேவேகாட்டை)

                  V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)

                  K. சீதாராமன்    (Swathi Agencies & Skandha Guru Chit funds  ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)  

     இவர்கள் இந்த பிள்ளையார் நோன்புப் பொருட்களை சென்னை வாழ் நகரத்தார்களுக்கு இலவசமாக 2015 முதல் வழங்கிவருகிறார்கள்.

            2015 ஆம் ஆண்டில் 40 குடும்பங்களுக்கும், 2016 ஆம் ஆண்டில் 90 குடும்பங்களுக்கும்,2017 ஆம் ஆண்டில் 110 குடும்பங்களுக்கும், 2018 ஆம் ஆண்டில் 300 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கியுள்ளார்கள். நடப்பு 2019 ஆம் ஆண்டில் 500 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கவுள்ளார்கள்.

வம்ச விருத்திக்குரிய பிள்ளையார் நோன்பின் மகிமையை உணர்ந்து அப்பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டுவதற்கு வழிவகை செய்யும் இந்த சேவை உள்ளபடியே நினைந்தூட்டும் தாயின் அக்கறை போன்றது தான். ஆகச் சிறந்த இ்நதப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மேற்சொன்ன நால்வரோடு கடந்த ஆண்டிலிருந்து (2018) கீழ்க்கண்ட இருவரும் சேர்ந்து தோள்கொடுக்கிறார்கள்.

                  கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)

                  ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)

   
         பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற விரும்புவோர் இவர்கள் குறித்த பதிவுக் காலத்தில் கீழ்க்கண்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

              1. பெயர்
              2. சொந்த ஊர்
              3. கோயில்
              4. சென்னையில் இருக்குமிடம்
              5. தொலைபேசி எண்

பொதுவாக பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு வாரங்களுக்கு இரண்டு வாரம் முன்பு தொடங்கி ஒரு வாரம் பெயர் பதிவு நேரிலோ தொலைபேசி அல்லது வாட்ஸ் ஆப் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.  பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு நாட்கள் முன்னர் இவர்கள் குறிப்பிடும் இடங்களில் இந்தப் பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற்றுக் கெள்ளலாம்.   இந்த ஆண்டு 13.12.2019 முதல் 20.12.2019 வரை பெயர்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு 28.12.2019  29.12.2019 தேதிகளில் விநியோகம் நடைபெறுகிறது.

            பிள்ளையார் நோன்பின் மகத்துவமான வம்ச விருத்தியை உணர்ந்து அந்த நல்ல மரபை மீட்கும் நல்லவர்களை நெஞ்சார வாழ்த்துவோம்.

நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349
25.12.2019

Sunday, 15 December 2019

அறிவின் உச்சம்: அர்த்தமுள்ள இந்து மதம்!!

அறிவின் உச்சம்: அர்த்தமுள்ள இந்து மதம்!!
                ******************************



                   இறைமறுப்பையும் 

                     மதிக்கின்றன  மதம்
                      இந்து  மதம்!

                      அது அறிவின் உச்சம்!!

                       🌿🌿🌿🌿



                       இந்து மதத்தை

                      தேர்ந்தெடுத்து நிந்திப்பது

                      மூன்றாம் தலைமுறை (3G)

                       கற்றற்ற சுதந்திரம்!

                      அவர்தம் இல்லத்தார்க்கும்     

                                                                 உண்டு

                        தனிமனித சுதந்திரம்!!




                     

                   🌿🌿🌿🌿


                      திருமதி ஸ்டாலின்

                      கோவில் கோவிலாக

                      வலம் வருகிறார்

                      ஊடக வெளிச்சத்தோடு!

                      கோயில்களும் வரவேற்கின்றன

                      மாலை மரியாதைகளோடு!!

                      பரம்பரை பக்தனோ

                      காத்துக் கிடந்து

                     இடிபட்டு மிதிபட்டு

                     வைகுண்டம் அடைகிறான்!

                    🌿🌿🌿🌿


                    அவர் பிரார்த்தனை 

                    அவர் சுதந்திரம்!

                    உவகையோடு ஊரரறிய
  
                    மரியாதை பெறுபவர்

                   ஒரு பிரார்த்தனையை



                      ஊரரறிய வைக்ககட்டும்



                        தெய்வ நிந்தனை ஒழிக!   

                 

                   
                  

                 
                   கோவில் மரியாதை மட்டுமல்ல

                   கோவிலுக்கு வரும்

                   ஒவ்வொரு பக்தனின்

                   மரியாதையும் நிச்சியம்!!

                  புரிந்து கொள்ளுங்கள் இதுதான்

                  அர்த்தமுள்ள இந்து மதம்!!

  
   ----- நலந்தா செம்புலிங்கம்
         26.07.2019



















Friday, 27 September 2019

Google 21

இன்று கூகிளின் 21 ஆம் பிறந்த நாள்  படையெடுத்த உலகை வென்றதெல்லாம் வரலாறு.  அந்த மாவீரர்கள் கூட அரசின் தலைமைகளைக் கைப்பற்றி அதன் மூலம் தான் மக்களை ஆண்டார்கள்.

        கூகிள் தொழில் நுட்பதால் உலகை வென்றுள்ளது.

        ஒவ்வொரு மனிதைனயும் நேரடியாக ஆள்கிறது.  அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் வல்லமை பெற்றுள்ளது.

        கூகிளையும் வெல்லும் சக்தி நிச்சயமாகத் தோன்றும்.  அது ஒரு வேளை ஒவ்வொரு மனிதனின் எண்ணைகளைக் கூட கண்காணிக்கக் கூடும்.

         நிலையாமைத் தத்துவமே நிலைக்கும்.

கூகிள் பற்றிய 45 விநாடி காணோளியை இணைப்பைச் சொடுக்கினால் பார்க்கலாம்..  பார்க்கத் தவறாதீர்கள்

Wednesday, 18 September 2019

பள்ளியின் புறச் சூழல் அகச் சூழலை மேம்படுத்தும்!!

பள்ளியின் புறச் சூழல் அகச் சூழலை மேம்படுத்தும்!!




           வணிகமயமான கல்வி கோலோச்சும் இந்நாளில் காமராசரின் மக்கள் கல்வியை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி அரசுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதுதான்.

           அந்த நற்சிந்தனைக்கு செயல்வடிவமாகத் திகழ்கிறது   உலகப் புகழ்பெற்ற கோவை மருத்துவர் டாக்டர் பாலவெங்கட் ,  தன் தந்தையார் பெயரில் வழங்கும் சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருது.

            தனியார் பள்ளிகளுக்குச் சாத்தியப்படாத பல சாதனகளை சாதித்து வரும் கோவை மசக்காளிப் பாளைய மாநகராட்சிப் பள்ளியின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் பெரிதும் காரணமான அப்பள்ளியின்  தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன், இந்த ஆண்டிற்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருதினை பெறுகிறார்.  இவ்விழா கோவையில் 19.09.2019 வியாழனன்று நடைபெறுகிறது.
Tmt Mythili Kannan, HM

                திருமதி மைதிலி கண்ணன் பள்ளியின் புறச் சுழல் மாணவனிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் ஊர் மக்களிடமும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவர்.  அவர் 1995 ஆம் ஆண்டில்   ஆசிரியப் பணியில் வலது காலை எடுத்து வைத்த   நாட்களிலேயே  அவர் பணியாற்றிய  பிச்சனூர் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதிலும் வகுப்பறையை அழகூட்டுவதிலும் அக்கறை செலுத்தியிருக்கிறார்.  2017இல் மசக்காளிப்பாளையத்தில் உள்ள கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பதவி உயர்வில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றதும் அப்பள்ளியை பொலிவூட்டுவதில் பெரும் கவனம் செலுத்தினார்.

  இவர் பொறுப்பேற்பதற்கு முன்னர் இப்பள்ளியை சிறப்பாக வழிநடத்திய கணித ஆசிரியர் திருமதி சுகுணா அவர்களும்   சக ஆசிரியர்களும், தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரும் கைகொடுத்துள்ளனர்.பள்ளி பொலிவுற்றதும் அப்பகுதி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பாடத்திற்கு அப்பாலும் மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.  அதன் விளைவாக யோகா பயிற்சிக்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருக்கிறார் தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன்.  யோகாவுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளையாக காரேத்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  வணிகமான கல்வியின் மையப் புள்ளியும் தனியார் சிறப்புப் பயிற்சி தொழிலில் முக்கியமானதும் விளம்புநிலை வருவாய் ஈட்டும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியான அபாகஸ் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் தலைமையாசிரியர் திருமதி மைதிலி கண்ணன்.அவருக்கே நேரடி ஈடுபாடுள்ள ரோபோடிக்ஸ் (ROBOTICS) வகுப்புகளுக்கும் muscial band குழு அமைத்து மாணவர்களுக்கு இசைக் கருவி பயிற்சிகளும் வழங்குகிறார்கள்.

                   இப்பள்ளியின் உற்சாகச் செயல்பாடுகளை 
முகநூலில் பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்புணர்வையும் பள்ளியின் முன்னேற்றங்களையும் உலகளாவச் செய்திருக்கிறார்கள் ஆசிரியர்கள் சக்திவேலும் திவ்யா பீட்டரும்.  இந்த வீச்சு முன்னணி மென்பொருள் நிறுவனமான CTS Software யும் ஈர்த்திருக்கிறது. அந்நிறுவனத்தின் CTS Out Reach தொண்டு அமைப்பும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு ப்ள்ளியின் ஆசிரியர்களோடும் பெற்றோர்களோடும்
Dr J Bala Venkat
 அப்பகுதி மக்களோடும் இணைந்து பள்ளியை முன்னெடுத்துச் செல்கிறது.  

                       இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் விருது, இப்பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஊக்கமளிக்கும்.  இது இன்னும் பல அரசுப் பள்ளிகளை இந்த வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும். இவற்றினால் காமராசரின் நோக்கம் மென் மேலும் வெற்றியடையும் என்ற பொதுநலனோடு இவ்விருதை வழங்கும் உலகப் புகழ் பெற்ற கோவை மருத்துவர் பால வெங்கட்டிற்கு ஒரு சுயநலமும் கைகூடும்.

                      அந்த சுயநலம் வேறொன்றுமில்லை இன்னும் பல"தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன்"கள் உருவாகுவார்கள்.

நலந்தா செம்புலிங்கம்
18.09.2019




Sunday, 25 August 2019

போஸ்ட் ஆபிஸ் சாவியைப் பெற்றுக் கொண்டேன்


காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் சுப. அண்ணாமலை நாசிக்கில் தனியார் நிறுவனம் ஒன்றில் PLANT HEAD ஆகப் பணியாற்றி வருகிறார்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி சத்திர மேலாண்மைக் கழகத்திற்குப் பாத்தியமான நாசிக் சொத்து ஒன்றை மீட்கும் மிகுந்த சிக்கலான சவாலான ஆபத்து நிறைந்து பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  அந்த அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  இதுமுதல் பகுதி

                      - நலந்தா செம்புலிங்கம்
                        25.08.2019




Saturday, 27 July 2019

தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்




தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்
***********

தென்னவன் அளவுகோல்களால் அளக்கவியலாத நல்லாசிரியர் மிக மிக வெற்றிகரமான தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்பதைத் தான் அறிந்திருந்தேன்.
அவருடைய தந்தையின் மரணச் செய்தியின் வாயிலாகத்
வாயிலாகத் தான் அவருடைய தந்தையும் ஒரு நல்லாசிரிரயர் என்பதும் அவரும் தலைமையாசிரியாகப் பணியாற்றினார் என்பதையும் அறிந்தேன்.






2018 புத்தாண்டு நாளையொட்டி 2017 ஆண்டிற்கு விடை கொடுக்கும் பாங்கில் தன் மாணவர்களிடமிருந்து என்னென்ன கற்றேன் என அருமையாக முகநூலில் எழுதியிருந்தார். அவருடைய முகநூல் பதிவை வைத்தே "தென்னவன் -- கற்பித்தலில் கண்ணதாசன்" வலைப் பதிவு எழுதினேன். அவரைப் பற்றியும் அவர் பள்ளியைப் பற்றியும் நான்கு வலைப் பதிவுகள் எழுதியுள்ளேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நான்கு பேரிடமாவது அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

இன்று அவர் தன் தந்தைக்கு எழுதியுள்ள அஞ்சலி சிலிர்க்க வைக்ககிறது.

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

என இந்த அஞ்சலியில் அவரே எழுதியிருக்கிறார். விதை, கவிதையாகட்டும் -- செடி, விருதாகட்டும்

மிகச் சிறந்த அஞ்சலி, ஆகச் சிறந்த அஞ்சலியாகவும் போற்றப்படலாம். கல்வி துறையில் விருதுகளைக் குவித்தவர், கவிதைத் துறையில் விருகளைக் குவிக்கட்டும்.

நலந்தா செம்புலிங்கம்
26.07.2019



தென்னவனின் அஞ்சலி தொடர்கிறது, வாசிக்க வேண்டுகிறேன்


*போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க*
-------------------------------------------------------------------
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !

Sunday, 14 July 2019

சாலைகளை அளந்த காமராசா் !!




          சாலைகளை  அளந்த   காமராசா்  !!



எல்லா அரசுகளும்
எல்லா நிலங்களையும்
அளக்கும், வரி விதிக்கும்
******


காமராசர் அரசும்
நிலங்களை அளந்தது
சாலைகளையும் அளந்தது
******                                  
புதுமாதரியாக அளந்தது
கல்விச் சாலைகளால்
சாலைகளை அளந்தது  

******
காமராசர்
அணைகளைக் கட்டினார் 

பள்ளிகளை விதைத்தார்
கல்விப் பயிரும் விளைந்தது
******
இன்று 
குடிநீருக்கே
கூப்பாடு போடுகிறோம்
******
கல்விச் சாலைகள்
புற்றீசலாய் பெருகிவிட்டன
கல்வி தான் கடைச்
சரக்காகி விட்டது
******
அரசே வீதி வீதியாய்
கள்ளுக் கடை திறக்கிறது
அரசு கொழிக்கிறது
சமூகம் சீரழிகிறது
******
நல்ல வேளை 
இது காமராசர் மண் 
என எவரும் முழங்கவில்லை
******
சிவகாமி மைந்தன்
நிம்மதியாய் துயில்
கொள்கிறார் - காந்தியின்* நிழலில்!

நலந்தா செம்புலிங்கம்
14.07.2019

* காமராசர் நினைவிடம் சென்னையில் காந்தி மண்டபம் அருகில் உள்ளது.