Showing posts with label மதுரை நல்லாசிரியர் தென்னவன். Show all posts
Showing posts with label மதுரை நல்லாசிரியர் தென்னவன். Show all posts

Saturday, 27 July 2019

தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்




தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்
***********

தென்னவன் அளவுகோல்களால் அளக்கவியலாத நல்லாசிரியர் மிக மிக வெற்றிகரமான தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்பதைத் தான் அறிந்திருந்தேன்.
அவருடைய தந்தையின் மரணச் செய்தியின் வாயிலாகத்
வாயிலாகத் தான் அவருடைய தந்தையும் ஒரு நல்லாசிரிரயர் என்பதும் அவரும் தலைமையாசிரியாகப் பணியாற்றினார் என்பதையும் அறிந்தேன்.






2018 புத்தாண்டு நாளையொட்டி 2017 ஆண்டிற்கு விடை கொடுக்கும் பாங்கில் தன் மாணவர்களிடமிருந்து என்னென்ன கற்றேன் என அருமையாக முகநூலில் எழுதியிருந்தார். அவருடைய முகநூல் பதிவை வைத்தே "தென்னவன் -- கற்பித்தலில் கண்ணதாசன்" வலைப் பதிவு எழுதினேன். அவரைப் பற்றியும் அவர் பள்ளியைப் பற்றியும் நான்கு வலைப் பதிவுகள் எழுதியுள்ளேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நான்கு பேரிடமாவது அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

இன்று அவர் தன் தந்தைக்கு எழுதியுள்ள அஞ்சலி சிலிர்க்க வைக்ககிறது.

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

என இந்த அஞ்சலியில் அவரே எழுதியிருக்கிறார். விதை, கவிதையாகட்டும் -- செடி, விருதாகட்டும்

மிகச் சிறந்த அஞ்சலி, ஆகச் சிறந்த அஞ்சலியாகவும் போற்றப்படலாம். கல்வி துறையில் விருதுகளைக் குவித்தவர், கவிதைத் துறையில் விருகளைக் குவிக்கட்டும்.

நலந்தா செம்புலிங்கம்
26.07.2019



தென்னவனின் அஞ்சலி தொடர்கிறது, வாசிக்க வேண்டுகிறேன்


*போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க*
-------------------------------------------------------------------
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !