Friday 7 September 2018

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிக்கும் சால்புடையவர் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலாளர் முனைவர் பழநி ராகுதாசன் ஐயா.

           அவர், பழைய புத்தகக் கடையில் புதிய புத்தகங்கள் அனைய புத்தகங்களையும்  (பாதி விலைக்குக் கிடைக்குமல்லவா?) புதிய புத்தகக் கடைகளில் பழைய பதிப்புகளையும் (தாள் பழுப்பேறியிருந்தாலும் விலை பல ஆண்டுகளுக்கு முந்தைய விலை அல்லவா?) தேடித் தேடி வாங்கும் புத்தகத் தேனீ.


             மதுரை புத்தகத் திருவிழாவில் பிரேம் சந்த வாழ்க்கை வரலாறு மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டியிருக்கிறது.  அந்த புத்தகத் திருவிழாவிற்கு ஆயிரமாயிரம் வாசகர்கள் தினந்தோறும்  வருகிறார்கள்.   விலை நெறுக்கப்பட்ட அந்த அருமையான புத்தகம் எல்லோர் கண்ணிலுமா பட்டது? கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் நெஞ்சில் பட்டது?  பழநி ஐயாவிற்கு நெஞ்சில் மட்டும் பட்டிருக்காது நெஞ்சில் சுருக்கென்றே தைத்திருக்கும்.  அவர் 12 பிரதிகள் வாங்கிவிட்டாராம்  (அவர் அந்தக் கடைக்குச் சென்ற போது 12 பிரதிகள் தான் இருந்திருக்கும், இருந்ததையெல்லாம் வாங்கியிருப்பார்)

                இந்த மதுரை க்கு ( "மதுரையில் புத்தகங்களுக்கு"  என்று வாசிக்க வேண்டுகிறேன் ) வந்த சோதனை பற்றி பழநி ஐயாவின் மகளும் திருவாடானைக் கல்லூரி பேராசிரியமான மணிமேகலை முகநூலில்  கீழக்கண்டவாறு பதிவு செய்துள்ளார்  \\\\\\\\\

                        
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு கேள்வி. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவுனர் பிரேம்சந்தின் வாழ்கை வரலாறு மதுரை புத்தகக் கண்காட்சியில் வெறும் மூன்று ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது அடுக்குமா????
அப்பா பன்னிரண்டு பிரதிகளை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.....
சரஸ்வதி ராம்நாத் மொழியாக்கம் செய்திருந்த பிரேம்சந்தின் "கோதான்" நாவலுக்கு ஒரு அற்புதமான முன்னுரை எழுதிய அப்பாவால் இந்த அவலத்தைப் பொறுக்கவே முடியவில்லை... \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அதற்கு நான் கீழ்க்கண்டவாறு 
சுருக்கமாகப் பதிலிட்டேன்

                   இன்னும் பல அவலங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


                         என்னென்ன அவலங்களுடன் வாழ்கிறோம் எனப் பட்டியிலிட ஆரம்பித்தால் பொன்னின் செல்வன் சிறிய நூலாகிவிடும்.  இரண்டே இரண்டு அவலங்களை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.  அதில் ஒன்று தன்னலம் சார்ந்ததே!  மற்றொன்று நூற்றிற்கு நூறு பொது நலம் சார்ந்தது.
                    
                   தமிழகத்தில் தமிழ் நூல்கள் விற்பைன குறித்து ஒரு ஊகக் கணிப்பு செய்துள்ளேன்.
                   
                   பள்ளி, கல்லூரி ஆண்டு விழாவிற்கான பரிசுப் பொருள்களுக்கென ஒரு கணிசமான விற்பைன வாய்ப்பு உள்ளது.  ஆனால் புத்தகங்களால் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்க ளோடு போட்டி போட முடியவில்லை. ஒரு வேளை  பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்களை வெற்றி கொண்டாலும் அந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ உள்ளுக்குள்ளேயே ஒரு பகுதி நேர பதிப்பாளரோ புத்தக விற்பனையாளரோ இருப்பார், அவரிடம் அந்தப் பள்ளியோ கல்லூரியோ ஒற்றை பைசா DISCOUNT  (நாங்க இதை மட்டும் இங்லீஷில் தான் சொல்லுவோம்) கேட்காமல் புத்தகங்களை வாங்கிவிடும்.

           நமது அறிவுத் தேடல், பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு ஊரில் ஒரு நாளில் 100 நூல்கள் விற்பனை ஆகவேண்டும் என ஒரு அளவு கோல் வைத்துக்கொண்டால். கோயமுத்தூரில் ஒரு நாளில் 51 நூல்கள் விற்பனையாகும் .  தமிழகத்தின் சராசரி 20 நூல்களாக இருக்கலாம்.  பல ஊர்களின் சராசரி 20 நூல்களைவிடவும் குறைவாக இருக்கலாம்.
   
நலந்தா செம்புலிங்கம்
07.09.2018




1 comment:

  1. நூலறி புலவரவர்.
    நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்.
    தகுதியானவருக்கு உரிய பதிவு.
    வாழ்த்துகள்

    ReplyDelete