Wednesday 5 September 2018

மனதில் பதியும் .........

மனதில் பதியும் .......


கணினிகள் வகுப்பறைக்குள்
வகுப்பறைகளும் கணினிக்குள்
மாணவன் விரலிற்கு
ஆசிரியரின் கரம்
அடைக்கலம் நல்கி
மணலில் அகரம் எழுதிய
காலம் பழங்கதை தான்
மணலில் எழுதினால்
மனதில் பதியும்
ஓரிசா மணல் ஓவியர்
பத்ம ஸ்ரீ பட்நாயக்
நாளும் நாளும் பதிக்கிறார்
மணலில் எழுதினால்**
மனதில் பதியும்
எழுத்தும் பதியும்
ஏற்றமிகு பண்பாடும் பதியும்
(**மாண்டிசாரி கல்வி முறையில் மாணவர்களின் விரலைப் பிடித்து ஆசரியர் உப்புத் தாளால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் மேல் விளம்பும் பழக்கம் இன்றும் உள்ளது)
நலந்தா செம்புலிங்கம்
05.09.2018




1 comment: