Thursday 30 August 2018

என் செல்லக் கண்ணனே!!


கண்ணனைக் கொஞ்சும் இந்த வண்ணத் தமிழைக் கேட்க ....



அந்த அற்புதமான பாடல் வரிகள்:::


கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழை தரையா உள்ளம்
பிசுப்பிசுப்பைப் பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண

நீ ராதை இடம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலைப் பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் ....

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததைப் போல்
எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ...


நலந்தா செம்புலிங்கம்
31.08.2018







4 comments: