Tuesday 27 March 2018

களைகட்டுகிறது கல்கத்தா !!

களைகட்டுகிறது கல்கத்தா !!
              ****
அன்று
பர்மா நகரத்தார்களின் கோட்டை
பன்னாட்டு அரிசி வணிகத்தில்
நகரத்தார் கொடி பட்டொளி வீசியது
கல்கத்தா படை வீடானது

சிங்காரவேலர் கடைக்கண் பார்வையில் கல்கத்தா கைவசமாகும்










                       

அந்தப் படை வீட்டிலிருந்து
எழுந்தப் புனிதப் பணி
காசி விசுவநாதர் திருப்பணி
                       ///
காலச் சுழற்சியில் 
பர்மாவும் அரசி வணிகமும்
பழம் பெருமையாயிற்று
                       ///
நம் மனமும்
காசியையும் கயாவையும்
தொழுது ஏற்றியது
கல்கத்தா சத்திரமும்
இறைப்பணிகளும்
தூரப் பார்வையிலேயே
தொடர்ந்தன
                       ///

மேலாண்மைக் கழத்தின்
நன்முயற்சியால் கல்கத்தா
செந்நகர் வாழ் நகரத்தார்  ஆதரவால்
புதிய அத்தியாயம்ஆரம்பமாகிறது
                       ///
வங்கத் தலைநகரில்
 சத்திரத்து சொத்துக் 
காப்பு மீட்புப் பணிகளில்
அரைக் கிணறு தாண்டியுள்ளோம்
                       ///
கூட்டுறவையும் 
கூட்டு முயற்சியையும்
கோட்பாடாகவும்
செயல்படாகவும் கொண்ட
பெருமுயற்சி கைகூடும்
நல்ல நேரம் வந்துவிட்டது
கெட்டி மேளம் கேட்கிறது
                       ///
ஹேவிளம்பி
பங்குனி உத்தரத்தில்
பால்க் குடம் காவடி
அபிக்ஷேக ஆராதனை
600 பேர் சங்கமம் என
களைகட்டுகிறது கல்கத்தா
சிங்கார வேலர் விழா
                       ///
சொத்துக்களால் எங்கும்
சண்டை வரும் நாளில்
கல்கத்தாவில் சிக்கல் விலக
நகரத்தார் எழுச்சி காண்கிறோம்
சிங்கார வேலர் துணை !!

                       --- நலந்தா செம்புலிங்கம்
                                                 26.03.2018 

3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Let it be a Kumbh Mela forthe welfare of Nagarathar with every heart praying for the same

    ReplyDelete
  3. From RM Narayanan of Devakottai now at Bangalore: Let the event strive to be a Kumbh mela of Nagarathar with every soul praying forthe same.Also Let the event get repeated every year increasin multifold in individuals participation on every better aspect with the blessings of Singara Velar.

    ReplyDelete