Showing posts with label சித்த மருத்துவர் வீரபாபு. Show all posts
Showing posts with label சித்த மருத்துவர் வீரபாபு. Show all posts

Thursday, 16 July 2020

பல நூறாண்டுகளும் சில ஆயிரமாண்டுகளும்......



அறிவியல் உலகம், அதாவது உலக அரசியல் அங்கீகரிக்கும் அறிவியல் உலகம் கொரோனாவிற்கு மருந்து இல்லை என்கிறது.

நான் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டவன்.  அதனால் முதலிலேயே 

கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை

Siddha Dr Veera Babu
என மூன்று முறை சொல்லிவிடுகிறேன். எனினும்  அறிவியல் உலகின் பால் நான் கொண்டுள்ள நம்பிக்கையால் விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் எனவும் உறுதி கூறுகிறேன்
 
உள்ளபடியே ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கண்டுபிடித்து நோயை அடக்குவோம் என்ற  மருத்துவ அறிவு நமக்கு வெள்ளைக்காரன் தந்தது தான்.

அந்த அறிவின்படி அறிவியல் பூர்வமாக கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஐதிராபாத் நிறுவனத்தின் தடுப்பு ஊசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சோதனைக்கு வருகிறது, வேறு சில நிறுவனங்களின் தடுப்பு ஊசிகளும் வரவுள்ளதாக செய்திகள் வருகின்றன.  இந்த சோதனைகளுக்கு முடிவு சாதமாக இருக்கும் என நம்புவோம்.  ஆனால் முடிவு எப்போது வரும்?  சில பல மாதங்கள் ஆகலாம்.  தடுப்பு ஊசி வருமுன் காப்பதற்குத் தானே?    நோய் வாய்பட்டவர்களுக்கு  இது மருந்தாகவும் செயல்படுமா?

அதற்குள் இன்னும் எத்தனை லட்சம் மக்களுக்குப் பரவும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. உலக வரலாற்றில் மிகக் கோரமான ஹிரோஷிம்மா நாகாசாகி அணுகுண்டு வெடிப்பு கூட ஒரு எல்லைக்குள் நின்று விட்டது.  கொரோனா உலகம் முழுவதை வதைத்துச் சிதைக்கிறது.

நிற்க, வெள்ளைக்காரன் வருமுன்னர் நாம் அறிவில்லாமலா இருந்தோம்?  இல்லை இல்லவே இல்லை, பேரறிவோடு இருந்தோம்.

இரண்டாமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 

என திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அதில் அவர் காலத்திற்கு முந்திய நூற்களை மருத்துவ நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

வெள்ளைக்காரனின் அறிவு பல நூற்றாண்டுகள் பழைமையானது.  நமது பாரம்பரிய அறிவு சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மையாது. 

நோயை எப்படி எதிர்கொள்வேண்டும் என்பதில் ஒரு விவாதம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.  நோய் கிருமியைக் கொல்லும் முறை அந்தக் கிருமியின் வடிவோமோ வீரையமோ மாறாமல் இருக்கும் வரை தான் எடுபடும்.  நோய்க் கிருமியின் வீரியம் வளர வளர மருந்தின் வீரயத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது.  பக்கவிளைவுகளும் அதிகரிக்கின்றன.  இந்த சிகிச்சை முறை சங்கிலித் தொடர நீடிக்கிறது.  அதற்குள் வணிகமும் செழிக்கிறது.

நோயை எதிர்கொள்ள நோயாளின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்பது அதிகரிப்பது என்பது எளிமையான உண்மை.  எளிமையான உண்மைகள் முக்காலத்திற்கும் பொருந்தும்.  


 

இதுவே அனேக பாரம்பரியமருத்துவங்களின் அடிப்படைத் தத்துவமாகும். இதற்கு சென்னை நகரில் மட்டும் ஓராயிரம் சான்றுகளை சித்த மருத்துவர் வீரபாபு உலகின் கண் முன் நிறுத்தியுள்ளார்.  அறிவியல் உலகம் கண் திறந்து பார்க்குமா?
நலந்தா செம்புலிங்கம்
16.07.2020