Monday, 14 May 2018

டிராபிக் சகாயம் சந்திரசேகருக்கு ஆதாயம் !!




டிராபிக் சகாயம் சந்திரசேகருக்கு ஆதாயம் !!    



   //////   *****    /////    *****   /////

தமிழகம் முதல்வர்களை
திரையரங்களில் தேடுகிறது !
^^^^^    ^^^^^^   ^^^^^
என மலையாள நடிகர் 
அறையும் போது என்ன செய்வது?
மறு கன்னத்தையும் 
காட்டத் தான் வேண்டும் !
^^^^^    ^^^^^^   ^^^^^ 
சாராயம் சர்க்காரை நடத்துகிறது !
லஞ்சம் வாழ்க்கை முறையாகிவிட்டது !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

சினிமா மோகம் எனும்
பெரும் பழிக்கு தீர்வாய் வந்தது 

வாராது வந்தது இளைஞர்களின்ஜல்லிக்கட்டுப் போராட்டம் !

இது காலம் கனியும் வேளை
என நம்பிக்கை துளிர்த்தது !!

^^^^^    ^^^^^^   ^^^^^ 






துணைக்கு மேலும் இரண்டு 
நம்பிக்கை நாணயங்களையும்
மெரினா போரட்டத்திற்கு முன்னேர
காலம் பரிசளித்திருந்தது !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

டிராபிக் ராமசாமி எனும்
தனி மனித இராணுவம் !


லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர
மக்கள் பாதையில்
வழிநடத்தும் சகாயம் !!

^^^^^    ^^^^^^   ^^^^^ 

எஸ். ஏ, சந்திர சேகர்
டிராபிக் ராமசாமி
வாழ்க்கையை
திரையில் வடிக்கிறாராம் !
அவரே நடிக்கிறாராம்
டிராபிக் ராமசாமியாய் !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 
ஆபாச காட்சிகள்
ஆபாச பாடல்கள்
மலிந்த படங்களை 
எடுத்த வரலாற்றை 
மறைகக்கவோ என்னவோ
அந்தப் படத் தொடக்க விழாவில்
இயக்குனர் சந்திரசேகர்
சற்றும் கூசாமல் சொல்கிறார்
டிராபிக் ராமசாமியும் 
இவரைப் போல் போராளியாம் !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

டிராபிக் ராமசாமியே இதையும்
பதிவு செய்கிறார் முகநுாலில்
கொடுமை ! கொடுமை !!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

வந்த கொடுமை போதாதென
இந்தப் படத்தின் டீசர் விழாவிற்கு
சகாயமே வந்து விட்டார் !

ஒரு வழியாய்
சகாயமும் டிராபிக் ராமசாமியும்
விளம்பரத் துாதுவர் ஆகிவிட்டனர்!
^^^^^    ^^^^^^   ^^^^^ 

இருபெரும்
நம்பிக்கை நாயகர்களுக்கும்
பாரதி படம் எடுத்த
ஞான சேகரனையோ
காமராசர் படம் எடுத்த
பாலகிருஷ்ணனோ
ஜெயகாந்தன் படம் எடுத்த
ரவி சுப்பிரமணியனோ
நினைவில் வராதது
தமிழகத்தின் தலையெழுத்தே !
^^^^^    ^^^^^^   ^^^^^ 

தமிழகத்திற்கு  சாபவிமோசனம்
கைக்கெட்டும் தொலைவிலிருந்தது
மெரினா எழுச்சியால், இப்போது
கண்ணுக்கு எட்டாமல் போகிறது

                            --  நலந்தா செம்புலிங்கம்

                                14.05.2018







Thursday, 10 May 2018

காரைக்குடியின் கனவுப் பள்ளி!



காரைக்குடியின் கனவுப் பள்ளி!

*** /// *** /// ***
காரைக்குடியின் கனவுப் பள்ளி!
மாநிலம் அறிந்த மாண்புறு பள்ளி!
அதைப் பேசாத ஊடகம் இல்லை!
அதுவே இராமநாதன் செட்டியார் பள்ளி!!
~~
ஒழுக்கம் கல்வி
விளையாட்டு போட்டி
எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும்!
~~
ஆசிரியர் பெற்றோர்
பொது நல சேவை அமைப்புகள்

அழகப்பர் கண்ட கல்விக்குடியின்
புதிய கல்விக்கு கோயிலுக்கு 
நல் அரண்களாயினர் !!
~~
பகைவர் இல்லாக் கோட்டைக்கு
பிள்ளைகள் தான் படையெடுத்தனர்!
85 பேருக்குத் தான் இடம்!
350 பேர் விண்ணப்பம்!!
~~
கல்வி வரலாற்றில்
ஹவுஸ்புல் பலகை 
மாட்டிய  ஒரே அரசுப் பள்ளி! 
இராமநாதன் செட்டியார் பள்ளி!!
~~
புதிய தலைமுறைக் கல்வி
இந்த வரலாற்றை
அட்டைப் படக் கட்டுரையாக்கிற்று!
~~
ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஒரு புறம்
படிக்க வந்த பிள்ளைகளைக்
கைவிடலாமா? தவிப்பு  மறுபும்
~~
பெற்றோர் கழகம் 
மனு மீது மனுக் கொடுத்தது
புதிய கட்டிடம் வேண்டி


~~




பிள்ளைகளைச் சேர்க்கத் துடித்த
பெற்றோரின் கண்ணீர்  
கல்விக் கடவுள் காமராசர்
சமாதியைச் சென்றடைந்தது!
~~

காமராசர் உயிர்த்தெழுந்தார்!

தலைமை ஆசிரியர் பீட்டர்
கனவில் வந்தார்! காதைத் திருகினார்!!
அவர் பாணியிலே அவரே
கேள்விகேட்டு தீர்வுரைத்தார்!
~~
நெனச்ச ஒடனே
 கட்டிடம் கட்ட முடியுமாங்கிறேன் ?
காலைல நூறு பிள்ளைக்கு 
சொல்லிக்கொடுங்கிறேன்! 
மத்தியானம் நூறுபிள்ளைக்கு 
சொல்லிக்கொடுங்கிறேன்!!
~~
அப்படித் தான் தோன்றியது

புரட்சிகரமான "ஷிப்ட்"

முறை கல்விச் சேவை!!
அதுவும் ஆறாம் வகுப்புக்கு !
~~

"ஹவுஸ் புல் பலகை"யும்
கல்வியுலக வரலாறு தான்
ஷிப்ட்"முறை கல்வியும்
கல்வியுலக வரலாறு தான்
முதலில் வந்தது பள்ளியின்  சாதனை!
தொடர்ந்த வரலாறோ
மக்கள் கல்விக்கு புதிய பாதை!!

       __நலந்தா செம்புலிங்கம்                         
           10.05.2018





Thursday, 3 May 2018

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?

விழிப்புணர்வா? வெறுப்புணர்வா?          
  //// **** ///// *** /////                           
                   







நகராட்சிப் பள்ளி நகராட்சியின் நெஞ்சை நிமிரச் செய்யும் பள்ளி என்ற தகுதியுடைய, தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பள்ளி, காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமுள்ளவர் திரு. திக கலைமணி.  

                    அவர் சமுக வலைத் தளங்களில் என்னுடைய பல நண்பர்களின் நண்பர்.  அவ்வழியில் அவருடைய பல பதிவுகளைப் பார்த்திருக்கிறன். அவர் பெயரிலேயே தன் இயக்கத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருப்பவர்.  அவர் பதிவில் பிரச்சாரம் தூக்கலாக இருக்கும்.  ஒரு இயக்க வெளியீட்டின் வாசனையோடு இருக்கும்..அண்மையில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தது அதற்குப் பிறகு தான் முகநுாலில் நண்பர்கள் ஆனோம்.
                        
                    இராமநாதன் செட்டியார் பள்ளியால் ஏற்பட்ட நட்பு அவருடைய ஒரு முகநுால் பதிவால் முள்ளாய் தைக்கிறது.

                   மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  அடிப்படைத் தேவைகளுக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள போது இப்படி ஒரு திருவிழாவிற்காக தண்ணீரைத் திறந்து விடுவது இவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது போலும்.  அது குறித்து இவ்வாறு முகநுாலில் பதிவு செய்துள்ளார்::::::

""""குடிக்கவும், குண்டி கழுவவவும் தண்ணி இல்லையாம்! கள்ளழகருக்கு அனையை திறந்து விடுவான்களாம்."""" 

           இராமநாதன் செட்டியார் பள்ளியிலும் அடிப்படை வசதிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது.  அது குறித்து நகாராட்சியில் மேற்படி திக கலைமணி மற்றும் பலர் மனுக் கொடுத்துக்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு திரு திக கலைமணி பேட்டியும் கொடுத்துள்ளார்.   

                     அப்போது திரு திக கலைமணி எந்த நடையில் பேசினார்?  கள்ளழகர்  விழா பற்றி அவர் போட்ட பதிவின் நடையிலா?

                       ஏன் இராமநாதன் செட்டியார் பள்ளி பிரச்சனையில் ஒரு நயதக்க நாகரீக நடை? கள்ளழகர் விழா பற்றிய பதிவில் கொச்சை நடை?

                       அவருடைய நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? வெறுப்புணர்வை ஏற்படுத்துவதா?

                        1992 ஆம் ஆண்டில் மகாமகத்தில் முதல்வர் ஜெயாலலிதா அவர்களும் திருமதி சசிகலா அவர்களும் தீர்த்தமாடுவதற்காகச் செய்யப்பட்ட சிறப்பு ஏற்படாடுகளால் மிக மிகக் கொடுரமான நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின.   அதுவும் இந்து மதத்தால் வந்த வினை தான். அதைப் பற்றி என்ன பதிவை திரு திக கலைமணியும் அவரது இயக்கமும் போட்டார்கள்? இதைப் போல கொச்சையாகப் போட்டார்களா?

                       கள்ளழகர் விழாவைப் பற்றி எவ்வளவு கொச்சையான நடையில் வேண்டுமானாலும் அவர் பதிவு போடட்டும், அதற்கு முன்னர் மதுரையில் மட்டும் இந்துக் கோவில்களில் பேரில் ஏற்படுத்தப்பட்ட ஊருணிகளையும் குளங்களையும் பட்டடியிலிட்டுவிட்டு, அவற்றை எம்மத்தினரும் பயன்படுத்த வழிசெய்த உண்மையான மதச் சார்பின்மையைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு திரு திக கலைமணி தனது கொச்சை நடையைத் தொடரட்டும்.


                     நான் இந்து தான், இந்து மதத்தில் குறைகள் உள்ளன. இந்து மதத்திலுள்ள குறைகளைக் களைய ஒரு வழி பெரிய புராணமே, தவிர பெரியார் அல்ல.


                     பெரியாரும் தேவைப்படுகிறார்,  திராவிடர் கழகத்தின் கிளை இயக்கங்களிலுள்ள உள்ள குறைகளைக் களைய! 
 

Wednesday, 25 April 2018

ஒத்தக்ககடையில் வெற்றிப் புன்னகை!!



ஒத்தக்ககடையில் வெற்றிப் புன்னகை!!

        புகைப்படக் கலைஞர்களின் சொற்களுக்கு அப்படியொரு மந்திர சக்தி இருக்கிறது.  நீங்களும் அந்த மந்திர சக்திக்கு ஆட்பட்டிருப்பீர்கள்ஆனால் அதை உணர்ந்திருக்கமாட்டீர்கள்.

          “ கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க, "லெப்ட் சைடு திரும்புங்க",  "என்னைப் பாருங்க   என அடுத்தடுத்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர் சொல்லச் சொல்ல புகைப்படம் எடுத்துக் கொள்ள நிற்பவரின் முகம் மெல்ல மெல்ல இருகும். 

          









         






இதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வரும்.  “அப்படியே பாருங்க, என்னைப் பாருங்க ....ஸ்டடி....அப்படியே கேமராவைப் பாருங்க என்று அவர் சொல்லும் கணத்திலேயே இவரின் முகம் காற்றைப் பரிகொடுத்த பலூனைப் போல வதங்கிப் போய்விடும்.

          இந்தப் புகைப்படக் கலைஞர்களிடமிருந்து எப்படித் தப்புவது? ஒழுங்காக "போஸ்" கொடுக்கச் சொல்லிக் கொடுக்க ஆளே இல்லையா?  என தருமி மன்றாடியதைப் போல நானும் அந்தச் சொக்கநாதரிடமே மன்றாடினேன். சொக்கநாதர் கருணை கொண்டு என் கனவில் வந்து காட்சியளித்தார்.  மதுரை ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு செல்க எனக் கட்டளையிட்டார்.

         பொழுது புலர்ந்ததும்  மதுரை ஒத்தக்கடைக்கு விரைந்தேன். அங்கு கோடை விடுமுறைக் கால பயிற்சி வகுப்பு ஏதேனும் நடக்கும் போலும் அதனால் தான் சொக்கநாதர் நம்மை அனுப்பியிருக்கிறார் என நினைத்துக் கொண்டு பள்ளியினுள் நுழைந்தேன்.
           
           அங்கு ஒரு பயிற்சி வகுப்பும் நடக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியிலிருந்து விடைபெறும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா தான் நடந்து கொண்டிருந்தது. அடடா இதற்குத் தானா தனியார் பேருந்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு விரைந்து வந்தோம் எனப் புலம்பினேன். அதுவும் சொக்கநாதர் காதில் விழுந்துவிட்டது, என் முன் தோன்றினார்கோபமாகவே இருந்தார்.  நல்லவேளை நெற்றிக்கண்ணைத் திறக்கவில்லை.  இதுவரைக்கும் தருமி கதை போல ஒடிக்கொண்டிருந்தது. திடீரென தடம் மாறிவிட்டது. சொக்கநாதர் கேள்வி கேட்க நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

                சொக்கநாதர்:   பிரிவு உபசார விழாவில் என்னவெல்லாம் நடக்கும்?

               நான்: விருந்து கொடுப்பார்கள்

                சொக்கநாதர்: சாப்பாட்டில் தான்  கவனம் போலும் சரிவேறென்ன நடக்கும்

                  நான்: பொன்னாடை போர்த்துவார்கள் 

                சொக்கநாதர்: அதற்குப் பிறகு ?

                    நான்: பரிசுகள் வழங்குவார்கள்

                    சொக்கநாதர், எதிர்பார்த்த  பதிலைத் தவிர வேறு எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமை இழந்த சொக்கநாதர்: 

                      குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவார்களா மாட்டார்களாஎன அதட்டினார்

                      நான்: ஆம் நிச்சியமாக எடுத்துக் கொள்வார்கள்.

                        சொக்கநாதர்: குழுப் புகைப்படத்தை  எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

                       நான்: மாணவர்கள் இரண்டு மூன்று வரிசை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள்,  அதற்கு பின் வரிசையில் மாணவர்கள் நிற்பார்கள்  அல்லது முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள்.

                         சொக்கநாதர்: ஆசிரியர் தலைமை ஆசிரியர் எங்கே  இருப்பார்கள்?

                        நான்:  முதல் வரிசை நடுவில் பெரிய நாற்காலியில் விரைப்பாக  உட்கார்ந்திருப்பார்கள்

                         சொக்கநாதர்: முக்கியமான இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை கூறியதால் நீ விரும்பிய புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் தேர்ச்சி பெற மிகச் சிறந்த குருநாதரைக் காட்டி வைக்கிறேன்.  

                    சொக்கநாதர்: இந்தப் பள்ளி நடு முற்றத்தில் 16 மரங்கள் உள்ளன வது மரத்தின் பின் நின்று கொள் அந்த வகுப்பறைக்குள் உன் குருநாதர்  புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் லயிப்பதைப் பார்,  ஏகலைவனைப் போலவே நீ தொலைவிலிருந்தே கற்றுக் கொள்வாய்.  உன் குருநாதர் துரோணாச்சாரியரைப் போல கட்டை விரல் காணிக்கையெல்லாம் கேட்கமாட்டார்.

                     நான்:  அது சரி  சொக்கநாத என் குருநாதர் யார்?

                       சொக்கநாதர்: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய (ஒத்தக்கடை) தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் தான் உன் குருநாதர்.

****/////****/////*****

                         குழுப் புகைப் படத்திற்கு மாணவர்கள் தலைமை ஆசிரியர் சில ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர் எல்லோரும் தயராகிவிட்டனர். 

                      எல்லா மாணவர்கள் முகத்திலும் சாதனைப் புன்னகை ஏறத்தாழ எல்லோர் கையிலும் ஒரு ஓவிய அட்டை.  தங்கள் முகத்தை விட அந்த ஓவிய அட்டை நன்றாகத் தெரியவேண்டுமென தலைக்குமேல் பிடித்துக் கொண்டார்கள்

                       நாற்காலிகளையே காணவில்லை நீள பெஞ்களையும் காணவில்லை. தலைமை ஆசிரியருக்கு மட்டுமல்ல சிறப்பு விருந்தினருக்குக் கூட நாற்காலி இல்லை.  

                             
  .              ஏதோ கூட்டாஞ்சோறு உண்பதற்கு உட்காருவதைப் போல கிட்டத்திட்ட அரை வட்டமாக அதுவும் பல் வரிசை போல சில  இடங்களில் ஒற்றை வரிசையிலும்  சில இடங்களில் இரட்டை வரிசையிலும் 10,11 மாணவர்கள் உட்கார்ந்தார்கள்.  அதற்குப் பின்னால் முட்டிக் கால் போட்டு ஒரு அரை வட்ட வரிசை. அதற்குப் பின்னர் நி்ன்று கொண்டு ஒரு வரிசை.  ஒரு ஆசிரியர் அந்த நிற்கும் வரிசையிலும் இன்னொரு ஆசிரியர் 


.
                   
















மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
உட்கார்ந்திருந்த வரிசையிலும் மாணவர்களோடு கலந்திருந்தனர். சிறப்பு விருந்தினரும் தலைமை ஆசிரியரும் முதல் வரிசையில் சம்மணமிட்டு மாணவர்களோடு கலந்திருந்தனர்.  மாணவர்களோடு மாணவராக தலைமை ஆசிரியர் கலந்து இருக்கும் போது அவர் தனித்துத் தெரிவதற்கு பெரிதும் காரணம் அவரது கட்டம் போட்ட சட்டையாதூய வெண்பற்களான்தைக்  கண்டுபிடிப்பது எளிதல்ல

                   பொதுவாக இதைப் போன்ற படங்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் கவனத்தை ஈர்க்கும் . பள்ளி மாணவர்களாகப் படத்தில் காட்சியளிப்பவர்கள் சமூகம் கொண்டாடும் மருத்துவராக உயரதிகாரியாக கலைஞராக பரிணமித்திருப்பார்கள்.  இவ்வளவு பெரிய ஆளுமைகள் சிறுவயதில் இப்படி இருந்தார்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் போது ஒரு புளகாங்கிதம் ஏற்படும்.

               ஆனால் ஒத்தக்கடைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபசார விழாப் படம் எடுத்த நாளிலேயே மிளர்கிறது. அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் முகத்தில் பூத்திருப்பது இயல்பான புன்னகை! இருக்கம் இல்லாத புன்னகை! கற்றலில் இனிமையை பறைசாற்றும் வெற்றிப் புன்னகை!!

நலந்தா செம்புலிங்கம்
25.04.2018