Monday 11 February 2019

Kashmir & Demonetization

காஷ்மீர் அனுப்பிய அமைதி ரோஜா!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



                     -- நலந்தா செம்புலிங்கம்
                         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 (நோட்டு மாற்றம் காஷ்மீரில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றி காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் ரஹ்மான் பிரமதர் மோடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் கவிதையாக்கம்)


அது கடிதம் அல்ல,
காஷ்மீர் அனுப்பிய
அமைதி ரோஜா!

காஷ்மீர் 
ரோஜாக்கள் பூக்கும்! 
தோட்டாக்களும் வெடிக்கும்!!



சிறுபான்மை (2%)
கலகக் கூட்டம்
பெரும்பான்மை
மக்கள் பேரைக் கெடுக்கும்,
வாழ்க்கையைக் குலைக்கும்!

அடைப்பதற்காகவே
கடை வீதிகள்
எறிப்பதற்காகவே
பள்ளிக் கட்டிடங்கள்
அமைதி என்றொரு சொல்
அகராதியில் மட்டும் இருக்கும்!


படித்த இளைஞர்களுக்கு
வாய்த்த வேலைகள்:
கல் எறிதல்,
ஆயுதம் கவர்தல்,
கைக்குண்டு எறிதல்,
பேரம் பேசாமல் 
கூலி கிடைக்கும்!
யாரோ எங்கோ
அச்சடித்த நோட்டுக்களில்!



எதுவும் நடக்கும் பூமியில்
எட்டாம் தேதிக்கு* பிறகு
நாடெங்கும்
நோட்டு மாற்றம்!
ரோஜா பூமியிலோ
கலகக்காரர்களின்
நோட்டு முடக்கம்!

பொழுது புலர்ந்தது,
கற்கள் தரையிலேயே கிடந்தன,
கையில் எடுப்போரில்லை!

கல்லடிபடாத கட்டிடங்கள்,
கிள்ளிப் பார்த்துக் கொண்டன!

வீதிகளில் நடமாட்டம்!
கடைகளில் வியாபாரம்!
முகங்களில் மகிழ்ச்சி!!


பள்ளிகள் திறந்தன!
தேர்வுகள் நடந்தன!
95 %  மாணவர்கள் எழுதினர்!!
விடைத்தாள் 
திருத்தப்படும் முன்னரே
பதிவானது வெற்றி !



வங்கிகளெங்கும் வரிசைகள்
சலித்துப் புளித்தது நாடு
பெருமிதத்தில் மிளிர்ந்தது 
ஆப்பிள் காடு



மோடி 
இரண்டு நோட்டுக்களைத்
திரும்பப் பெற்றார்,
ஒரு புதிய நோட்டை
அறிமுகப் படுத்தினார்.



காஷ்மீரில்
ஹவாலா ஆறு
வற்றிப் போனது!
கலகம் ஓய்ந்தது
அமைதி மலர்கிறது!!


* 08.11.2016
(நலந்தா செம்புலிங்கம் எழுதிய  நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா? எனும் நூலின் இறுதி அத்தியாயமாக பிரசுரமான புதுக் கவிதை.  பதிப்பாளர்: விஜயா பதிப்பகம், கோயமுத்தூர் தொலைபேசி: 04222394614)




2 comments:

  1. யதார்த்தத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete