Saturday 22 December 2018

சோழனை மீட்டெடுத்த வேலன்!!






தமிழ்த் திருமுறைகளை 

மீட்டெடுத்தவன் சோழன்

அந்தச் சோழன் சிலையை
மீட்டெடுத்தவன் வேலன்


சிலை மீட்கப் பிறந்தவன்
நீதி தேவதை கண்டெடுத்த
காவல் நாயகன்!       





சக்தி, வேல் கொடுத்தாள்!
செந்தில் வடிவேலன்
சூரனை வதைத்தான்!
இது புராணம்!


பொன் வேலனுக்கு
நீதித்தாய் வேல் கொடுத்தாள்!
வேலனையே வதைக்கிறார்கள்
இது கலிகாலம்!



சிலைகள் இவனிடம்
அடைக்கலம் கேட்கும்!
அவன் நெஞ்சுறுதி கண்டு
மலைகளும் மலைக்கும்!


கடைசி மூச்சுவரை
கடமை வேள்வி தொடரும்! 
நல்லெண்ணங்களும்
நல்லான்மீகமும் என்
பின்புலம் என்றே 
சூளூரைத் தான்!


மாயமான சிலைகள் மீள்கின்றன

அவன் பிறக்கும் முன்னர்

மாயமான சிலைகளும் மீள்கின்றன


வஞ்சகர்க்கு அஞ்சும் பேடிமை வீழ்கிறது
காக்கிச் சட்டைக்கு மெருகேறுகிறது!
பாரதியின் மீசை மீண்டும் துளிர்க்கிறது!!


நலந்தா செம்புலிங்கம்
21.12.2018

திரு பொன் மாணிக்கவேல் பற்றிய BBC யின் பதிவையும் படியுங்கள்: https://www.bbc.com/tamil/india-46619314

No comments:

Post a Comment