Wednesday 24 January 2018

இந்தக் கனவு மெய்ப்படும்











இந்தக் கனவு மெய்ப்படும்!!

                  கலாம் என் கனவில் வந்தார், உங்களுக்கு பிடித்த ஊர் எது எனக் கேட்டேன். இராமேஸ்வரத்தைச் சொல்லுவார், அப்படிச் சொன்னால் தும்பாவை (விண்கல ஆய்வகம்) விடப் பிடித்த ஊரா? என மடக்கலாம் என்றிருந்தேன்.  அவர்  "எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி தான்" என என்னை மடக்கிவிட்டார். நான் அசரவில்லை. ஏன் காரைக்குடி எனக் கேட்டேன். அங்கு தான் கலாம் வகுப்பறை இருக்கிறது என்றார்.  ஆம் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் கலாம் வகுப்பறை இருக்கிறது, ஆனால் காரைக்குடி தான் உங்களுக்கு பிடித்த ஊர் என்பதற்கு வலுவான ஆதாரம் வேண்டும் எனக் கறராகச் சொல்லிவிட்டேன். அவர் ஆதாரங்களைப் பட்டியலிட்டுவிட்டார். முதலில் (07.11.2017) இந்தியா 2020 மாணவர்களுக்காக எளிமைப்படுத்தி தமிழாக்கம் செய்த எழுத்தாளர் கமலவேலனை அனுப்பினேன். பிறகு (20.01.2018) அக்னிசிறகுகள் விற்பனையில் சாதனை படைத்த "விஜயா" வேலாயுத்தை அனுப்பினேன். நேற்று (23.01.2018) அக்னிசிறகுகளை தமிழாக்கம் செய்த மு. சிவலிங்கத்தையும் அனுப்பிவிட்டேன். இதெல்லாம் சரி 


                 


தான் நீங்கள் எப்போது வருவீர்கள் எனக் கேட்டேன். "நிச்சியமாக வருவேன், காரைக்குடியில் பிறந்து கார்த்திகேயன் பள்ளிக்கு மாணவனாக வருவேன்" என்றார். இந்தக் கனவு நிச்சியம் மெய்ப்படும்.  நலந்தா செம்புலிங்கம். 24.01.18





1 comment: