Tuesday 2 January 2018

திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                 





                 சொந்தத் தொழில் செய்வோருக்கு , மாதப் பிறப்பு என்பது   செலவு ஏடு குறுக்கே மறிக்கும் நாள்.   ஒவ்வொரு செலவு இனமாகத் தீர்த்து  ஐந்து தேதிக்குள்ளாவது அல்லது 10 தேதிக்குள்ளாவது மாதக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.  அதனால் எனக்கு நானே முதல் தேதியன்றே அழுத்தம் கொடுத்துக்   கொள்வேன்.  நேற்று, ஜனவரி முதல் நாள் அப்படி ஒரு அழுத்தம் கொடுத்துக் கொள்ள மறந்துவிட்டேன். இரவு தான் அடடா ஒரு நாளை வீணடித்து விட்டோமே என்ற நினைவே வந்தது.

         எல்லாம் HAPPY NEW YEAR திணிப்பினால் வந்த வினை.

        நான் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம் என முகநுாலில் பதிவு வாயிலாக வேண்டுகோள் விடுத்தும் அதனைப் பாராட்டுவோரும் கூட எனக்கும்  HAPPY NEW YEAR சொன்னதை என்னவென்று சொல்ல? 

              திருக்குறளன்பர்களுள்ளும் எத்தனை பேர் திருவள்ளுவர் ஆண்டை முன்னிலைப்படுத்துகிறார்கள்?

           இந்தியை திணிக்க இன்றும்  சிலர் இருக்கிறார்கள், ஆங்கிலேய பழக்க வழக்கங்களை யார் திணிக்கிறார்கள்? நம்மைத் தவிர?

          ரஜினி அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? விவாதங்களையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.  திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                                            நலந்தா செம்புலிங்கம்
                                              02.01.2018 (திருவள்ளுவர் ஆண்டு 2047 மார்கழி 18)

1 comment: