Monday 4 March 2019

விண்ணில் கவிதை வரைவான்

விண்ணில் கவிதை வரைவான்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^







மீசை வைத்த பாரதி
பாரத மாதாவின்
இருபதாம் நூற்றாண்டு தவப்புதல்வன்
தமிழில் கவிதை புனைந்தான்
மனதில் உறுதி வேண்டும் என்றான்
ரெளத்திரம் பழக வேண்டும் என்றான்

அவனுக்கு ஒரு புதிய வாரிசு 
மீசை வைத்த அபிநந்தன்
விண்ணில் கவிதை வரைவான்
மனதில் உறுதி கொண்டான்
ரெளத்திரம் செய்து காட்டினான்
விசையுறு பந்தினைப் போல்
முன் தலைமுறை விமானத்தால்
புதிய தலைமுறையை வீழ்த்தினான்

அந்த அறுபது மணிநேரமும்
அகிலத்திற்கே தலைப்புச் செய்தியானான்
 
தன்னை மறைத்து தன்னலம் துறந்து
நாட்டைக் காக்கும் கடும்பணியாளன்

அவன் வீரத்தை போற்றுவோம்
அவன் தீரத்தைப் பாடுவோம்

நல்லோரும் அல்லோரும் துரத்துகிறார்கள்
செயல் ஒன்று நோக்கம் வேறு வேறு
அவன் தனிமை போற்றுவோம்
வலைத்தள ஆர்வலர் விலகியிருத்தலும்
ஊடக சோடனைகள் படரலாமலித்தலும்
அவன் பணி சிறக்க நம் கடனாகும்

அவன் தீரம் போற்றுவோர்
போலிகள் முகத்தை கிழிப்பதும்
துரோகிகள் சதியை முறிப்பதுமே
நன்றி மலர்களாகும்

நலந்தா செம்புலிங்கம்
04.03.2019

2 comments:

  1. சிறப்பு .
    இராணுவப் படை விமானிக்கும்
    ஒரு இனிய கவிதை.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமையான பாராட்டுக்கவிதை

    ReplyDelete