Sunday 21 January 2018

கலாம் பிள்ளைகள்

ஒரு தாய் தன் பிள்ளையைத் திறமையான பிள்ளையாக வளர்க்கிறார்.  அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர், இந்தப் பிள்ளை இன்னொரு வீட்டின் பிள்ளை என்று சொன்னால் அந்தத் தாய்க்கு எப்படி இருக்கும்? நேற்று காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் அது தான் நடந்தது

ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!       
         
            
           .
             
                     காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில்  ஆசிரியை லெட்சுமி தம் மாணவர் நெஞ்சங்களில் அப்துல் கலாமை விதைத்திட வேண்டுமென்பதில் மிகவும் முனைப்பாகவுள்ளார்,  கலாமின் வரலாறு,  கதைகள் கவிதைகள் படங்கள் பொன்மொழிகள் எனப்பல வகையாலும் கலாமை மாணவர்களிடம் பதியவைக்கிறார்.  இவருடைய வகுப்பறையின் பெயரே கலாம் வகுப்பறை தான்.  இந்தத் தகவலை அக்னிசிறகுகள் நுால் வெளியீட்டு விழாவில் (1999) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் அந்நுால் விற்பனையில் சாதனை புரிந்து அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவருமான கோவை விஜயா பதிப்பக அதிபர் திரு மு வேலாயுதனார் அவர்களிடம் வெள்ளிக் கிழமை தற்செயலாகப் பேசும் போது சொன்னேன்.  உடனே அவர் பரவசமடைந்து நான் மேலுாரில் தான் நாளை அந்தப் பள்ளிக்குப் போய் பார்ப்போம் என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.  பிறகு தான் இந்த சனிக்கிழமை விடுமுறை நாள் என்று தெரிந்தது, எனினும் வகுப்பாசிரியை லெட்சுமி அவர்களும் தலைமை ஆசிரியை ஸ்வேதா அவர்களும் கலாம் வகுப்பறை மாணவர்களுக்கு தகவல் கொடுத்துப் பெரும்பாலான மாணவர்களை வரவழைத்துவிட்டார்கள்.  


                    இந்த சந்திப்பில் விஜயா வேலாயுதன் அவர்களும் பேராசிரியர் பழனி ராகுலதாசன் அவர்களும் அந்தக் கலாம் வகுப்பறை மாணவர்களை கலாம் பிள்ளைகள் என்று பிரகடனப் படுத்திவிட்டார்கள். ஒப்புதல் கோராமல் நிறைவேற்றப்பட்ட சுவீகாரத்தில் அந்தத் தாய் ஆசிரியர்களும் நெகிழ்ந்து போனார்கள்.


No comments:

Post a Comment