Wednesday 4 October 2017

மதிப்பெண்களுக்கு அப்பாலுமுள்ள மாணவர் நலன்

மதிப்பெண்களுக்கு 
அப்பாலுமுள்ள மாணவர்நலன் 
 வெற்றி என்பது முயற்சியின் பலன்.  ஒரு முயற்சியில்முதல் முயற்சியில்வெற்றி பெறுவது என்பதே பெரும் சிறப்பு.  ஓரே முயற்சியில் இரண்டுகுறிக்கோள்களை அடைய முனைந்தால்உலகம் அந்த முயற்சியையே பேராசைஎனக்கருதும்:  ஒரு கல்லில் இரண்டு மாங்காயாஎன    எதிர்கேள்வி கேட்கும்.
             
      இப்போது ஒரு விருதுமூவருக்குப் பாராட்டாக அமைந்துள்ளது 


  காரைக்குடி அழகப்பா  மெட்ரிக் பள்ளிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளனஆனால் வெளியில் தெரியாத  ஒரு சிறப்புமதிப்பெண்களுக்கு அப்பாலுமுள்ள மாணவர்களின் நலன்களை மேம்படுத்த ஒரு ACADEMIC COUNSELOR - நியமித்திருக்கிறார்கள்அச்சொல்லிற்கு கல்வி ஆலோசகர் என்று  அகராதி பொருள்சொல்கிறது.  ஆனால் அழகப்பா மெட்ரிக் பள்ளியின் ACADEMIC COUNSELOR -ன்  பணி  அகராதி தரும் விளக்கத்தைவிடக் கூடுதலானது.


 .  தனிக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது தான் அவரதுமுதன்மைப் பணி.  அத்துடன் இந்தக் காலத்தில் மிகவும் அரிதாகிவிட்ட நீதிநெறிவகுப்பு நடத்துவதும் அவரது பணியாகும்

       அந்தப் பணியை உருவான கதை இன்னும் சுவையானது.  ஒரு மாணவியின் தாய்,பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளி மற்றும் மாணவர்களின் நலனிற்காக சிலகருத்துக்களைச் சொன்னார்.  அவர் சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றஅவரையே ACADEMIC COUNSELOR  நியமித்துவிட்டார்கள்.  அப்போது அந்தத் தாய்முதுகலை சட்டம் (M.L) பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்அழகப்பாவின் அழைப்பை ஏற்று சட்டப் பணியை விடுத்து கல்விப் பணியை ஏற்றாா்.



அவர் தான் திருமதி வித்யாலட்சுமி.   
இவர் B.A., M.L., P.G.D.H.R.M., 
எனப் பலபட்டங்களைப் பெற்ற
 நற்சிந்தனையாளர்.     இவர் தமது பள்ளிப் பணியின் 
நீட்சியாக"சிகரம் தொடுவோம்"  
எனும் தனித்துவம் வாய்ந்த 
பத்திரிக்கையையும்
நடத்திவருகிறார்.

            



 இப்பணிகளிக்கிடையே    M.A  (Child care & Education)  படித்துவருகிறார்.  இவற்றோடு மேடைப் பேச்சிலும் கவிதையிலும் சிறந்து விளங்கும் இந்தமாணவர் மேம்பாட்டு ஆலோசகரை தினமலர் நாளிதழ் , "லட்சிய ஆசிரியர்எனும்தகுதியான விருது வழங்கிய அண்மையில் கெளரவித்திருக்கிறது.

             மாணவர் மேம்பாட்டு ஆலோசகர் வித்யா லட்சுமி மட்டுமல்லதினமலரும்,அதற்கும் மேலாக அழகப்பா மெட்ரிக் பள்ளியினரும் பெரும் பாராட்டிற்குரியவர்கள்தான்
                         நலந்தா செம்புலிங்கம்
                                                                          03.10.2017


No comments:

Post a Comment