Tuesday 27 June 2017

காமராசா் நாடா? சுயநிதி முதலாளிகளின் வேட்டைக் காடா?


   ஐயகோ இது காமராசா் நாடா?

  

          ஒரு சாமானியனின் மகள்
           ஊராட்சிப் பள்ளி மாணவி பிரத்திகா
           தன் இசை மழையாலும், 
           இணைய உலகின்
           வாக்கு மழையாலும்,
           செல்லக் குயிலாய் தேர்வானாள் 
         பரிசு மழைகளுக்கிடையில்
         ஊடகங்கள் கொண்டாடும்
         சூப்பர் சிங்கர் ஆனாள்

          இன்று அவள் பள்ளி
          உலகம் அறிந்த ஊராட்சிப் பள்ளி !!
          அங்கொன்றும் இங்கொன்றுமாய் , 
          அரசுப் பள்ளிகள் அசத்தும் மற்றபடி
          அவை யாரும் தேடாத
          சவலைப் பிள்ளைகளாகும் !
           பகட்டும் படாடோபமும்
          பெற்றோரைச் சுண்டியிழுக்கும் !
          அவர்கள் மடியையும் ஒட்டக் கறக்கும் !!
          மற்றொரு பக்கம் மதிப்பெண் மயக்கம்
          பிள்ளைகளைக் காவு கேட்கும் !



          ஐயகோ

         இது காமராசா் நாடா?
         சுயநிதி முதலாளிகளின் 
         வேட்டைக் காடா?

இது என்னுடய  உலகம் அறிந்த ஊராட்சி பள்ளி என்ற என்னுடைய முந்தைய பதிவின் ஒரு பகுதி.  அப்பதிவினைப் பாாக்க என் வலைப்பக்கத்திற்கு வருக  http://nalanthaa.blogspot.com/2017/06/blog-post_24.html


No comments:

Post a Comment